Saturday 22 February 2020


திருச்சி மாவட்டம் அரியலூர் கிளையில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் VRS ல் ஒய்வு பெற்று நம் சங்கத்தில் இணைந்தவர்களுக்கு  சங்கத்தின் சார்பாக ஒரு அருமையான பாராட்டு விழா நடைபெற்றது . ஜெயங்கொண்டம் தொலைபேசி நிலையத்தில் அழகிய ஷாமியானா அமைக்கப்பெற்று திரு அருள் பிரான்ஸிஸ்  DE  ( Retd On VRS ) அவர்கள் தலைமையில் , மாயகிருஷ்ணன் SDE முன்னிலை வகிக்க பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.கிளைசெயலர் தோழர் V .செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஓய்வு பெற்றுள்ள 11 தோழர்கள் எல்லோருமே நம் சங்கத்தில் சேர்ந்ததுதான் மேலும் தங்கள் மனைவி, மக்கள் , உற்றார் உறவினர் களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அத்தனை தம்பதிகளுக்கும் சால்வை போர்த்தப்பட்டு , சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
தோழர் ஆறுமுகம் அரியலூர் கிளை செயலர் , M .மாரிமுத்து, சத்யா JTO , OFC JTO  மற்றும் பல தோழர்கள் பாராட்டி, வாழ்த்தி பேசினார்கள். சுமார் 50 தோழர்கள் கலந்துகொண்ட இக்குடும்ப விழா முடிவில் தோழர் V .ரங்கநாதன் நன்றி உரை வழங்க கூட்டம் இனிதே நிறைவடைந்தது .

No comments:

Post a Comment