EXTRA INCREMENT CASE
Today our extra increment case came in Madras High court as item No:13 before court No: 5. Arguments on both sides completed and judgement reserved.
Message from Com. A. SUGUMARAN, Legal Advisor, CHQ
ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது
தோழர்களே
/ தோழியர்களே ,
நாளை
16-04-2026 மாலை 4-00
மணிக்கு 60 எத்திராஜ் சாலையில் உள்ள CCA அலுவலக
வளாகத்தில் நடைபெற
இருந்த அனைத்து ஓய்வூதியர் சங்க உறுப்பினர்களின் மாபெரும்
ஆர்ப்பாட்டம் நடத்த அளிக்கப்பட அனுமதி தேர்தல்
நடத்தை விதி முறைகள் காரணமாக
தற்போது மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் ஒத்தி
வைக்கப்பட்டது .
11/04/2026 காலை 1030 மணிக்கு நமது சங்கத்தின் அலுவலகத் திறப்பு விழா மாவட்டத் தலைவர் தோழர் அசோகராஜன் தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை தலைவர் கி. அசோகராஜன் எற்றினார். சங்க அலுவலகத்தை மாநில செயலர் திறந்து வைத்தார். அதன் பின்னர் மூத்த தோழர் லோகநாதன் சங்க பலகையை திறந்து வைத்தார், பின்னர் புதுவை தமிழ் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. மாவட்ட செயலர் தோழர் சிவகுமார் வரவேற்புரையில் அலுவலகம் பெற எடுக்கப்பட்ட முயற்சி, அதற்கு உறு துணையாக இருந்த அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி பாரட்டினார். அலுவலக நிர்வாகச்செலவு வருடம் ரூ50000 ஆகும். இது வரை நன்கொடைஅளித்தவர்களுக்கு நன்றி கூறி எதிர்கால செலவுகளுக்கு தோழர்களின் ஒத்துழைப்பு, உதவி தேவை அனைவரும் அலுவகம் வந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வருமாறு அழைப்பு விடுத்தார். அனைவரும் ஊக்கமான செயல்பாட்டுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்தார்.
தலைவர் உரையில் சங்க அலுவலகம் பெற்றது மிக பெரிய சாதனை. அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டார்
பின்னர் தோழர் சதாசிவம்,மாநில சங்க நிர்வாகி துவக்க உரையில் புதுவையின் சங்க வரலாறு, 6வது, 7வது pay commission பற்றியும், 16-04-2026 அன்று IDA வெளியிட கோரி நடைபெறும் இணைந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டினார் பின்னர் மாநில செயலர் சிறப்புரையாற்றினார்.
ஊதிய, ஓய்வவூதிய மாற்றம், நீதிமன்ற வழக்கு, 78.2 % பிரச்சனை மாற்று தீர்வு, ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை,, notional increment பிரச்சனை,, குடும்பஓய்வு ஊதிய பிரச்சனை, வருமான வரி, எக்கிரேசியா, பிடித்தம், சொசைட்டி பிரச்சனை,, அனைவருக்கும் அவர்களுக்கான தொகை பெறுவது முன்னுரிமை, அதன் மீது போட்டி செயல்பாடு என அனைத்து பிரச்ச்னைகள் மீது விளக்கமாக உரையாற்றினார்.
அதன் பின்னர் தோழர் சாம்பசிவம் உரையில் சொசைட்டிக்கு மாற்று தீர்வுக்காண வேண்டும். காவல்துறை வழக்கு தேவை என கூறினார், மாநில செயலர் உறுப்பினர்களுக்கு பணம் பெறுவது தன்னுடைய முன்னுரிமை என கூறினார்.
பின்னர் தோழர் காமராஜ், மாநில சிறப்பு அழைப்பாளர் உரையில் சங்க அலுவலகம் பெற எடுத்த முயற்சி அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். அனைவருக்கும் ஆன இடம் அதற்கான நிதி தந்து சங்க அலுவகம் தனக்கும் உரிமையான இடம் என உணரவேண்டும். சங்க அன்றாட செயல் பாட்டுக்கு அனைவரும் உதவிட, பங்களிக்க முன் வர வேண்டும் என்றார்
தோழர் ஹரிஹரன் புதுவை VRS Ex-gratia சம்பந்தமான விபரங்களை கூறி நன்றி கூறினார்.