Monday 19 September 2022

 

AIBSNLPWA   Thanjavur District

BSNL உதவும்  உள்ளங்கள் தஞ்சை . செய்தி.

பேரன்புடையீர் வணக்கம் .24. 10. 2022 தீபாவளி திருநாளை  முன்னிட்டு,  கடந்த 25 ஆண்டுகளாக  தொடர்ந்து உங்களின் ஒத்தழைப்போடு செய்துவரும் மனிதநேய செயல்பாடுகளை இந்த ஆண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் செய்ய உள்ளோம் .

1.கடுவெளி வெங்கடேஸ்வரா ஆதரவற்ற  முதியவர்கள் தாத்தா 40 பாட்டி 70 ஆதரவற்ற  பெண்கள் 20

200 மாணவ மாணவிகளில் அம்மா அப்பா இல்லாத  100  பேர்

2 .தில்லையம்பூர் முதியோர் இல்லத்தில் உள்ள  பாட்டி 90, தாத்தா 80.

3. தஞ்சாவூர் அன்பாலயம் மனநலம் பாதிக்கபட்டவர்கள்  இல்லத்தில் உள்ள பெண்கள் 45 ஆண்கள் 50 உள்ளாடை, நைட்டி, புடவை, பர்முடாஸ்,  கைலி & டீ சர்ட்

4 தஞ்சை ஓசாணம் முதியோர் இல்லத்தில்  பாட்டிகள் 42 தாத்தாக்கள் 5

தஞ்சை செல்வமலர் மூளை வளர்ச்சியற்ற  குழந்தைகள் 30

6 .சேவாலயா முதியோர்இல்லம் தாத்தா 12 பாட்டி 15

7  தஞ்சை  அரசு பார்வையற்றோர்  பள்ளி மாணவியர் 15 மாணவர் 15

8. தஞ்சை அரசு காது கேளாத  பேசமுடியாத மாணவிகள் 15 மாணவர்கள் 15

9 தஞ்சை அரசு  அன்னை சத்யா ஆதரவற்ற மாணவிகள்  15

10. Guild of service மாணவிகள் 10

11 .Guild of service மாணவர்கள் 10 

ஆதரவற்ற   மாணவ மாணவிகள்.  மன நலம் பாதிக்கபட்டவர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட  பட்டாசுகள்  சுமார் 1800 மாணவ மாணவிகள்,  தாத்தா & பாட்டிகளுக்கு  இனிப்பு - காரம் வழங்க  உள்ளோம்.   ஏழைகள்,  இல்லாதவர்களுக்கு உதவி செய்வது கடவுளுக்கு செய்வது ஆகும்  கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு  தில்லையம்பூர் முதியோர் இல்லத்தையும் புதிதாக சேர்த்துள்ளோம். 

தங்களால் இயன்றதை மனமுவந்து புதிய ஆடைகளாகவோ  பணமாகவோ  தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்   

பணமாக அணுப்புவர்கள் கீழே உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டு 94860 52389 என்ற அலைபேசியில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.தொடர்ந்து பணி தொடர  இறையருளை வேண்டும் .

வீ. சாமிநாதன்
ஒருங்கிணைப்பாளர் ,
BSNL  உதவும் உள்ளங்கள், தஞ்சை.
குறிப்பு:பேங்க் அக்கவுண்ட் Details .
V .Saminathan
SB Account  number 20212516210 IFSC code SBIN 0004899

 State Bank of India VOC  Nagar Branch Thanjavur.


Sunday 18 September 2022

 17.09.2022 சனிக்கிழமை குடந்தை AIBSNLPWA  மாவட்டச்சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் காலை 11.00 மணிக்கு தோழர். N.அனந்தன், சங்க ஆலோசகர் முன்னிலை வகிக்க, தோழர்.N.தனபாலன், மாவட்டத் தலைவர் அவர்கள் தலைமை தாங்க சிறப்பாக நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் பெரும்பாலோர் கலந்துகொண்டனர். தலைவர் வரவேற்புரை நல்க, தொடர்ந்து தோழர்.A.சிவகுமார், மாவட்டப் பொருளாளர் அவர்கள் மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர். N.இசக்கிமுத்து அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தோழர்.R.ஜெயராமன், மாநில உதவி செயலர் மறைந்த தோழருக்கு புகழஞ்சலி செலுத்தியபின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், பார்வையாளராக வந்திருந்த உறுப்பினர்கள் அனைவரும் மறைந்த தோழருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலர் பொறுப்பிற்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக உள்ள நடைமுறைகளை சங்க ஆலோசகர் தோழர். Nஅனந்தன் அவர்கள் விரிவாக விளக்கி கூறினார். மாவட்டத் தலைவர் அவர்களும் விருப்பமுள்ளவர்கள் முன்வந்து தங்களது பெயர்களைத் தரலாம் என்று கூறினார். தோழர்.N.அனந்தன் அவர்கள் தோழர்.R.ஜெயராமன் அவர்களது பெயரை முன்மொழிந்தார். வேறு முன்மொழிவுகள் எதுவும் வராத காரணத்தால் தோழர்.R.ஜெயராமன் அவர்கள் குடந்தை மாவட்டச் செயலராக ஒரு மனதாக நியமனம் செய்யப்பட்டார் என மாவட்டத் தலைவர் தோழர். N.தனபாலன் அவர்கள் பலத்த கரகோசத்திற்கிடையே அறிவித்தார். இதை வரும் பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் பெருவது என்றும் தீர்மானிக்கப்பட்டதுகாலை பிஸ்கட்,தேநீர், மற்றும் மதிய உணவு வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. தோழர்.A.வெங்கடராமன், மா.து.பொருளாளர் அவர்கள் நன்றியுரையுடன் செயற்குழு கூட்டம் இனிதே நிறைவேறியது.
தோழமை வாழ்த்துக்களுடன் 
R.ஜெயராமன்,
மாவட்டச் செயலர்,
மாநில உதவி செயலர்,
AIBSNLPWA, 
 கும்பகோணம்.