Sunday 18 September 2022

 17.09.2022 சனிக்கிழமை குடந்தை AIBSNLPWA  மாவட்டச்சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் காலை 11.00 மணிக்கு தோழர். N.அனந்தன், சங்க ஆலோசகர் முன்னிலை வகிக்க, தோழர்.N.தனபாலன், மாவட்டத் தலைவர் அவர்கள் தலைமை தாங்க சிறப்பாக நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் பெரும்பாலோர் கலந்துகொண்டனர். தலைவர் வரவேற்புரை நல்க, தொடர்ந்து தோழர்.A.சிவகுமார், மாவட்டப் பொருளாளர் அவர்கள் மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர். N.இசக்கிமுத்து அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தோழர்.R.ஜெயராமன், மாநில உதவி செயலர் மறைந்த தோழருக்கு புகழஞ்சலி செலுத்தியபின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், பார்வையாளராக வந்திருந்த உறுப்பினர்கள் அனைவரும் மறைந்த தோழருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலர் பொறுப்பிற்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக உள்ள நடைமுறைகளை சங்க ஆலோசகர் தோழர். Nஅனந்தன் அவர்கள் விரிவாக விளக்கி கூறினார். மாவட்டத் தலைவர் அவர்களும் விருப்பமுள்ளவர்கள் முன்வந்து தங்களது பெயர்களைத் தரலாம் என்று கூறினார். தோழர்.N.அனந்தன் அவர்கள் தோழர்.R.ஜெயராமன் அவர்களது பெயரை முன்மொழிந்தார். வேறு முன்மொழிவுகள் எதுவும் வராத காரணத்தால் தோழர்.R.ஜெயராமன் அவர்கள் குடந்தை மாவட்டச் செயலராக ஒரு மனதாக நியமனம் செய்யப்பட்டார் என மாவட்டத் தலைவர் தோழர். N.தனபாலன் அவர்கள் பலத்த கரகோசத்திற்கிடையே அறிவித்தார். இதை வரும் பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் பெருவது என்றும் தீர்மானிக்கப்பட்டதுகாலை பிஸ்கட்,தேநீர், மற்றும் மதிய உணவு வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. தோழர்.A.வெங்கடராமன், மா.து.பொருளாளர் அவர்கள் நன்றியுரையுடன் செயற்குழு கூட்டம் இனிதே நிறைவேறியது.
தோழமை வாழ்த்துக்களுடன் 
R.ஜெயராமன்,
மாவட்டச் செயலர்,
மாநில உதவி செயலர்,
AIBSNLPWA, 
 கும்பகோணம்.









No comments:

Post a Comment