Sunday 9 February 2020


இன்று 8 2 2020 தஞ்சை மாவட்ட அகில இந்திய ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் பிப்ரவரி மாத மாதாந்திர பொதுக்கூட்டம் தஞ்சை பெசன்ட் லாட்ஜ் கலையரங்கத்தில் வெகு விமர்சியாக நடத்தப்பட்டது. கூட்டம் காலை  10 மணிக்கு தொடங்க பெற்று நண்பகல் 2 மணி அளவில் நிறைவு பெற்றது. கூட்டத்தில் 160க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது  அல்லாமல் சென்ற மாதம் விருப்ப ஓய்வு பெற்று சென்ற தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது பாராட்டும் வகையில் அமைந்தது. தோழர் மதுரை ராஜேந்திரன் தலைவர் தலைமையில் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் மற்றும் தோழர் பிரின்ஸ் மாவட்ட செயல் தலைவர் ஆகியோர் முன்னிலை வகிக்க தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று நடத்தினார். முதலில் தோழியர் விசாலாட்சி இறைவணக்கம் பாடிட தோழர் . அய்யனார் இணை செயலர் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் தோழர்கள் பிரின்ஸ், நடராஜன், இருதயராஜ், பிரான்சிஸ் சேவியர், சூரியமூர்த்தி, கைலாசம், தோழியர்கள் பத்மினி, மல்லிகா சுகுமாரன், பட்டுக்கோட்டை தோழர்கள் தங்கையன், வீரபாண்டியன், நாடிமுத்து மன்னை தோழர் முகமது யாசின் மற்றும் சென்ற மாதம் விருப்ப ஓய்வு பெற்ற தோழர்கள் தோழியர்கள் பன்னீர்செல்வம், செல்வபதி ,முகிலன், ஆரோக்கியதாஸ், லைலா பானு ,எம்.எஸ். அமுதா ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள் முடிவாக தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் சிறப்புரை ஆற்றினார்கள். அனைவரது உரைகளிலும் இன்றைய  விஆர்எஸ் நிகழ்வுகள் மற்றும் இன்றைய நிலையில் நாம் ஆற்ற வேண்டிய செயல்கள் பற்றியும் வருகின்ற 7-3-2020 ல் நடைபெற இருக்கின்ற உலகினர் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். நிறைவாக மாவட்ட செயலர் சென்ற மாதம் விருப்ப ஓய்வு பெற்ற 272 உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நமது சங்கத்தில் இணைய இருப்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்து அனைவரது உறுப்பினர்களின் கவனத்தையும் கவர்ந்து சிறப்புரை ஆற்றினார். இந்த மாதம் பிறந்த தினம் அமையப்பெற்ற உறுப்பினர்கள் மற்றும் சென்ற மாதம் ஓய்வு பெற்று நமது சங்கத்தில் ஐக்கியமாகி இருக்கும் மூன்று தோழர்களின் மணி விழாவும் சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் வாழ்த்து கோஷத்துடன் இனிதே கொண்டாடப்பட்டது. நிறைவாக தோழர் ஆரோக்கியதாஸ் நன்றி நவில மதிய தஞ்சை இனிய நன் சுவை விருந்துடன் கூட்டம் சிறப்பாக நிறைவுற்றது.
வாழ்க ,வளர்க ,
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம்.


No comments:

Post a Comment