Saturday 1 February 2020

காரைக்குடி (SSA)   பரமக்குடியில்
 வரவேற்பு கூட்டம்.
01-02-2020 காலை 1100 மணி
இடம்: தொலைபேசி நிலையம்.
பரமக்குடி பகுதியில் விருப்ப ஓய்வில் விடையளித்து வெளியே வந்த. தோழர்களை வரவேற்கும் முகத்தான் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர்
திரு.சங்கிலிராஜன் அவர்களும்
திரு. ஜெயராமன் அவர்களும் தலைமை தாங்கினர்.
திரு.கருணாகரன் அவர்கள் தனது இனிய குரலில் இறைவணக்கம் பாடினார்.
கிளைச்செயலர் இராமசாமி அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாரி அவர்கள் புதிய தோழர்களை
அறிமுகப்படுத்திவைத்ததோடு அவர்களின் பிரச்னைகள் பற்றியும்  ஓய்வூதியப்பட்டுவாடாவுடன் அதை தீர்த்து வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
NFTE சங்கத்திலிருந்து மாவட்டம் முழுமையும் 102 பேர் விருப்ப ஓய்வு கொடுத்தனர்.இதில் இருவர் இறந்து விட்டனர். மீதம் 100 பேர்களும் AIBSNLPWA சங்கத்தில்தான் உறுப்பினர் ஆவார்கள் என உத்தரவாதமும் கொடுத்தார். 
திரு.முருகேசன் அவர்கள் ஓய்வூதியர்கள் உடல்நலம் பேணுதல் பற்றி ஒரு சிறு உரை நிகழ்த்தினார். 
புதிதாக சேர்ந்த தோழர்களின் பெயர்களை பாலுச்சாமி அவர்கள் வாசிக்க  மாவட்டச் செயலர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்
கேடர் வாரியாக
SDE.....2 ,  JTO.....1,  STS.....3 , JE.......3,  TT.......19
புதிய தோழர்கள் 27 பேர் உட்பட கூட்டத்தில் 67 பேர் கலந்துகொண்டனர்
புதிய தோழர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு தெரிவிக்கப்பட்டது







No comments:

Post a Comment