Monday 10 February 2020


இன்று 10.02.2020 AIBSNLPWA கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி இரண்டாம் ஆண்டு விழாவும் ஓய்வூதியர் தின விழாவும் VRS_optees 2019 வரவேற்பு விழாவும் ஆகிய முப்பெரும் விழா தோழர். ,N.தக்ஷிணாமூர்த்தி தலைமையில் மிக விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.200 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டு உள்ளனர். தோழர்.H. இஸ்மாயீல் மரக்காயர் வரவேற்று பேசிட தோழர்.K.லட்சுமிநாராயணன் ஆண்டறிக்கை வாசித்திட பொருளாளர்.தோழர்.
இஸ்மாயில் மரக்காயார் வரவு செலவு அறிக்கையை அவையில் தாக்கல் செய்து பெருத்த கரவொலி யோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 இன்றைய சிதம்பரம் பகுதி முப்பெரும் விழாவில் தோழர். A.ஜெயகுமார் மாவட்ட உதவி செயலாளர் உரையாற்றுகிறார். 2019-2021 ஆண்டுகளுக்கான சிதம்பரம் பகுதி புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவில் VRS -OPTEES-2019 தோழர்கள். 43 பேருக்கு கைத்தறி துண்டுகள் அணிவித்து அன்பாக வரவேற்க பட்டனர்VRS ல் சிதம்பரம் பகுதியில் ஓய்வுபெற்றவர்கள் எண்ணிக்கை 43 . அதில் 41 தோழர்கள் நம் சங்கத்தில் இணைகின்றனர். அது போலவே சிதம்பரம் பிஎஸ்என்எல் DE Mrs.Geetha மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாநில செயலாளர். R.வெங்கடாச்சலம் ,  மாநிலத்தின் துணைத்  
தலைவர் K.சந்திரமோகன் சிறப்புரை யற்றினார்கள் மாநில மற்றும் மத்திய சங்கம் தற்போதைய நிகழ்வுகளை பற்றி விரிவுரை ஆற்றினார்கள் இறுதியில் நன்றி தெரிவித்து கூட்டம் இனிதே முடிவுற்றது
 நன்றி உரை தோழர்.G.S.குமார் புதிய சிதம்பரம் பகுதி செயலாளர்


No comments:

Post a Comment