Wednesday 21 August 2019


தஞ்சை மாவட்ட ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதிய ர் நல சங்கத்தின் பத்தாவது அமைப்பு தின நிகழ்வுகளின் தொகுப்புரை.
இன்று காலை 11 மணி அளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் பத்தாவது ஆண்டு அமைப்பு தின கொண்டாட்டங்கள் இனிதே ஆரம்பமாகியது. 60க்கும் ஏற்பட்ட தோழர்களும் தோழியரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். முதல் நிகழ்வாக தொலைபேசி வளாகத்தின் முகப்பில் நமது சங்க கொடி ஏற்றும் நிகழ்வு- மாவட்ட தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்று நடத்திட மாவட்ட செயலர் தோழர் வீ. சாமிநாதன் அனைவரையும் வரவேற்க நமது சங்க கொடியினை தோழர் டி. முருகேசன் மாவட்ட துணை பொருளாளர் பெருத்த வாழ்த்து கோஷங்களுடன் ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள். அடுத்து உள் வளாகத்தில் அமைப்பு தின கூட்டம் இனிதே ஆரம்பமாகியது. மாவட்டத் தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமையேற்க மாவட்ட செயலர் தோழர் வி சாமிநாதன் முன்னின்று நடத்தினார். தோழர்கள் பிரான்சிஸ் சேவியர் மற்றும் டி முருகேசன் மாநில சங்க நிர்வாகிகள் முன்னிலை வகிக்க தோழர் கே ‌.அய்யனார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்து மாநில நிர்வாக தோழர்கள் பிரான்சிஸ் சேவியர் மற்றும் டி. முருகேசன் அமைப்பு தின வாழ்த்து உரையாற்றினர். அடுத்து தோழர் கே. சந்தான கோபாலன் துணைத் தலைவர் பத்தாவது ஆண்டு அமைப்ப தின உரையில் சங்கத்தை வாழ்த்தி நாம் எம் ஆர் எஸ் மற்றும் pension revision பற்றிய இன்றைய நிலையையும் நாம் ஆற்ற வேண்டிய செயல்பாடுகளையும் பற்றி விளக்கிப் பேசினார். அடுத்து தோழர் என் .நடராஜன் அவர்கள் நமது சங்க பத்தாவது அமைப்பு தினத்தை ஒட்டி சிறப்பானதொரு கவிதை வாசித்து சிறப்பு செய்தார். நிறைவாக மாவட்ட செயலர் நமது சங்க பத்தாவது அமைப்பு தின சிறப்பினையும் நாம் ஆற்றிய ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் விளக்கமாக உரையாற்றி நிறைவு செய்தார். நிறைவாக தோழர் எம். கணேசன் அலுவலக செயலர் நன்றி நவில இனிய தேனீருடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
வாழ்க ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம்.
வளர்க அவர்தம் சாதனைகள் மற்றும் செயற்பாடுகள்.


No comments:

Post a Comment