Monday 12 August 2019

ன்று (12 -08 -2019 ) விருதுநகர் மாவட்ட கிளை மிக சிறப்பான பொதுக்குழு கூட்டம் ஒன்றை தொலைபேசி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
அகில இந்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் தோழர் S.அருணாச்சலம் மற்றும் தமிழ் மாநில செயலாளர் தோழர் R.வெங்கடாச்சலம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் தோழர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
மாவட்டத் தலைவர் தோழர் N. சண்முகம் தலைமை ஏற்றார். இன்று நம்முன் நிற்கும் ஏழாவது சம்பள குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்  நம் ஓய்வூதிய மாற்றம் , நம் சங்கத்தின் நிலைப்பாடு ,அதை பெறவேண்டி நம் சங்கம் எடுத்து வரும் முயற்சிகள், MRS, நிலைமை , CGHS , ஓய்வூதியர் சங்கங்களின் ஒன்றிணைப்பு ஆகிய விபரங்கள் குறித்து நம் மாநில செயலர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பேருரையாற்றினார். தோழர் அருணா சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார்.
நம் மாநில, மற்றும் மாவட்ட சங்கங்களின் பெரு முயற்சியால் குடும்ப ஓய்வூதியர் தோழியர் சந்திரா ( மறைந்த கோவிந்த சாமி, RM, ராஜபாளையம் அவர்களின் மனைவி ) விற்கு நிலுவைத்தொகை சுமார் 6 .5 லட்சம் ரூபாய் பெற்றுத்தந்தமைக்கு தன் நன்றியறிதலை  தெரிவிக்கும் விதமாக உடல் நலம் குன்றியிருக்கும் தோழியர் சந்திரா தன் சகோதரரை விழாவிற்கு அனுப்பி தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி , மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 15000/- நன்கொடை அளித்து மகிழ்ந்துள்ளார். அவருக்கு விழாவினர் நன்றியையும் , விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். 
சுமார் 150 உறுப்பினர்களுக்கு மேல் கந்துகொண்ட கூட்டத்தில் , சமீபத்தில் நம் சங்கத்தில் சேர்ந்துள்ள 9 புதிய உறுப்பினர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.


















No comments:

Post a Comment