Sunday 11 August 2019


10.8.19 இரண்டாவது சனிக்கிழமை கடலுார் மாவட்ட AIBSNLPWA மாதாந்திரக் கூட்டம் தோழர். இளங்கோ Retd PRO தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.தோழர். ரகோத்தமன் வரவேற்புரையை ஆற்றினார்.தோழர்கள்.பால்கி ,NT ,வேலாயுதம் ,மாவட்ட செயலாளர் .அசோகன் மாவட்ட தலைவர் PJ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜூலை இறுதியில் பணி ஓய்வு பெற்று நம் சங்கத்தில் சேர்ந்த தோழர்கள்.K.சீனிவாசன்,செல்வகுமார், உத்திராபதி ஆகியோருக்கு கைத்தறி ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இன்றைய கூட்டத்தில் 80 தோழர்கள் கலந்துகொண்டது சிறப்பு. இன்றைய தேதியில் கடலூர் மாவட்டத்தில் 823 ஆயுள் சந்தா உறுப்பினர்கள் ஆகும் 31 ஆகஸ்ட் 19 பணி ஓய்வு பெற உள்ள நான்கு ஊழியர்களும் நம் சங்கதில்தன் ஆயுள் சந்தா உறுப்பினராக சேர உள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. இன்றத கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் தோழர் சீனிவாசன் தேநீர் விருந்து அளித்தார்.கடலூரில் 20.8.19 நடைபெற உள்ள பத்தாவது அமைப்பு தின சிறப்பு கூட்டத்தில் அனைத்து தோழர்களும் அவசியமாக கலந்துகொள்ள கேட்டு கொள்ளப்பட்டது.தோழர் G.அசோகன் நன்றி உரை நிகழ்த்தி கூட்டம் நிறைவுற்றது.


No comments:

Post a Comment