Sunday 11 August 2019


ஞ்சை மாவட்ட அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்  நல சங்கத்தின் மாதாந்திர மற்றும் பத்தாவது ஆண்டு சங்க அமைப்புகூட்டத்தின் தொகுப்புரை.
இன்று 10 8 2019 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் மற்றும் பத்தாவது ஆண்டு சங்க அமைப்பு தினமும் வெகு விமர்சையாக கொண்டாடி நடத்தப்பட்டது. தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை பத்து முப்பது மணிக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியரும் கலந்து கொள்ள கூட்டம் இனிதாக தொடங்கியது. தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க தோழர் ஏகே தனபாலன் கௌரவத் தலைவர் மற்றும் தோழர்பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் முன்னிலையில் தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் கூட்டத்தினை முன்நின்று நடத்தினார். முதலில் தமிழ் தாய் வாழ்த்து இசைத்திட தோழர் மதுரை ராஜேந்திரன் விழாவினை தொடங்கி வைத்திட தோழர் அய்யனார் இணைச் செயலர் கூட்டத்தின் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். தோழர் பட்டுக்கோட்டை சிவசிதம்பரம் வரவேற்புரையாற்றினார். சென்ற மாத கூட்டத்திலிருந்து இன்றைய வரை உயிர் நீத்த தோழர்கள் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் முகத்தான் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தோழர் ஏகேடி கௌரவத் தலைவர் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் தோழர் பட்டுக்கோட்டைசிவி தங்கையன் தோழர் என் நடராஜன் தோழர் எம். இருதயராஜ் தோழர் புருஷோத்தமன் தோழர் கே சந்தான கோபாலன் ஆகியோர் நமது சங்கத்தின் பத்தாவது அமைப்பு தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் இதுவரை சாதித்த செயல்களையும் வருங்காலத்தில் முக்கியமாக நிகழ்த்தப்பட வேண்டிய ஓய்வுஊதிய மாற்றத்தின் அவசியத்தை தங்களுக்கே உரிய பாணியில் சிறப்பாக உரையாற்றி நிறைவு செய்தனர். தோழர் பட்டுக்கோட்டை வீரபாண்டியன் கவுரவ ஆலோசகர் தனது சிறப்புரையில் சங்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு தின முக்கியத்துவத்தையும் ஓய்வூதிய மாற்ற சாதக பாதகங்களையும் விளக்கி உரையாற்றினார். முடிவாக செயலர் சாமிநாதன் அமைப்பு தின வரலாற்றினையும் ஓய்வூதிய மாற்றம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கி உரையை நிறைவு செய்தார். அகவை என்பதை கடந்த மூத்த தோழர் துரைராஜ் அவர்களின் சதாபிஷேகம் மற்றும் இந்த மாதம் பணி நிறைவு செய்த தோழர்களின் மணி விழாவும் இந்த மாதம் பிறந்த தினம் அமையப்பெற்ற தோழ தோழியரின் பிறந்தநாள் விழாவும் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு வாழ்த்து கோஷங்களுடன் இனிதாக கொண்டாடப்பட்டது. தோழர் கே சீனு பொருளாளர் நன்றி உரையாற்றினார். தஞ்சை சுவைமிகு மதிய இன்சுவை உணவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
வாழ்க ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச் சங்கம்.
வளர்க நம் சங்க  செயல்கள் மற்றும் சாதனைகள்.


No comments:

Post a Comment