Saturday 11 May 2019


காரைக்குடி SSA சிவகங்கையில் மேதினக் கொடியேற்றமும்
மற்றும் கிளைக்கூட்டமும் 11-05-2019 அன்று நடைபெற்றது. 
சிவகங்கை தொலைபேசி நிலையத்தில் மேதின சங்கக்கொடியை
80-வது வயதை எட்டிப்பிடிக்கும் மூத்த தோழர். சண்முகம்
அவர்கள் ஏற்றிவைத்தார். 
கிளைக்கூட்டம் கிளைத்தலைவர் திரு. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
எண்பதாம் வயதை எட்டிப்பிடித்த சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்தனமாலை அணிவித்து கௌரவப் படுத்தப்பட்டனர். 
திரு.இன்னாசிமுத்து ஆபரேட்டர் சண்முகம் இராஜசேகர் Rtrd DGM  குமார் இராமநாதபுரம் கிளைச்செயலர் இராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். 
மாவட்டத்தலைவர் முருகன் மாவட்டச்செயலர் நாகேஷ்வரன்
தீர்க்கப்பட்ட பிரச்னைகள் பற்றியும் தீர்க்கப்படாத  பிரச்னைகள் பற்றியும் மருத்துவப்படி பலருக்கு இன்னும் ஏன் போடப்படவில்லை என்பது பற்றியும் உரையாற்றினர். 
அகில இந்திய உதவிப்பொதுச்செயலர் தோழர்.அருணாச்சலம் அவர்கள் சிறப்புரையாற்றினார். ஓய்வூதியமாற்றம் BSNL நிறுவனத்தின் நிலை எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் மருத்துவச்செலவு ஆகியவைபற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  விநாயகம் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை முடித்துவைத்தார். 
அக்னி நட்சத்திரத்து வெயிலையும் பொருட்படுத்தாது 50 உறுப்பினர்களைக் கொண்ட கிளையில் 45 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது, பாராட்டத்திற்குரியது .


No comments:

Post a Comment