Saturday 11 May 2019


இன்று பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் தஞ்சை மாவட்டத்தின்  பொதுக்கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை  பத்து முப்பது மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 140 தோழர்களும் தோழியர்களும் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.
தோழர் மதுரை ராஜேந்திரன் தலைவர் தலைமை ஏற்க தோழர் ஏகே தனபாலன் கௌரவத் தலைவர் மற்றும் தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் முன்னிலையில் தோழர் வி. சாமிநாதன் மாவட்ட செயலர் கூட்டத்தினை சிறப்பாக நடத்தினார்.
முதல் நிகழ்வாக சென்ற மாதக் கூட்டத்தில் இருந்து இந்த மாதம் கூட்டம் வரை உயிர் நீத்த தோழர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆன்மா சாந்தி அடைய இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல் நிகழ்வாக தோழியர் அருட்செல்வி கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் கே .அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்திட கூட்டத்தினை தலைவர் தலைமையேற்று தொடர்ந்து நடத்தினார்.
தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் , தோழர் கே டி கௌரவத் தலைவர் ,தோழர் என் நடராஜன் ,  தோழர் கே. சந்தானகோபாலன் துணைத் தலைவர்,தோழர் என் பாலசுப்பிரமணியன் 2 தோழர் இளங்கோவன் மற்றும் தோழர் ராஜாராமன் சென்ற மாதம் ஓய்வுபெற்று இந்த மாதம் நமது சங்கத்தில் இணைந்தது குறித்து நமது சங்கத்தின் செயல்பாடுகளை சிலாகித்து பேசி அமர்ந்தனர்.
 சென்ற மாதம் ஓய்வுபெற்ற 11 அங்கத்தினர்களின்  மணி விழாவும் இந்த மாதம் பிறந்தநாள் அமைந்திட்ட தோழர் தோழர்களின் பிறந்தநாள் விழாவும்  சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு விண்ணதிர வாழ்த்து கோஷங்களுடன்    கொண்டாடப்பட்டது. இறுதியாக தோழர் கே. சீனு பொருளாளர் நன்றி கூற கூட்டம் நிறைவேறியது. இன்றைய கூட்டத்தின் தஞ்சை பாரம்பரிய விருந்து தோழர் ராஜாராமன் ரிட்டயர்டு  டி ஜி எம் அவர்களால் வழங்கப்பட்டு அனைவரும் உண்டு மகிழ்ந்து சென்றனர்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
வி .சாமிநாதன்,
மாவட்ட செயலர்,
தஞ்சை மாவட்டம்.


No comments:

Post a Comment