Wednesday 19 December 2018

PENSIONERS' DAY CELEBRATION IN KARAIKUDI
காரைக்குடியில் I.யாக்கூப் அவர்கள் தலைமையில் நடந்த கிளைமாநாட்டை மாநில துணைத்தலைவர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் நயமான உரைநிகழ்த்தி துவக்கிவைத்தார்.

முன்னதாக மாவட்டச்செயலர் அஞ்சலி உரைநிகழ்த்தினார்
அஞ்சலி உரையில் நாம் பெற்றுவரும் ஓய்வூதியத்திற்கு
காரணகர்த்தாக்களாக விளங்கும் அனைவரையும் நினைவு கூர்ந்தார்.

கிளைச்செயலர் சுந்தரராஜன்  அவர்கள் யல்பாட்டறிக்கையையும்
கிளைப்பொருளர் இராஜேந்திரன் அவர்கள் நிதிஅறிக்கையும் சமர்ப்பித்தனர்நிதிஅறிக்கையில் மூத்த தோழர். RK.பாண்டியன் அவர்கள் கூறிய  ஆலோசனை ஏற்கப்பட்டது.

நிர்வாகிகள் பட்டியலை சிவராமன் முன்மொழிய முருகன் வழிமொழிந்தார்.

திரு.பாண்டித்துரை திரு.சுந்தரராஜன் திரு.இராஜேந்திரன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 அகிலஇந்திய துணைத்தலைவர் தோழர்.முத்தியாலு
மாநில துணைத்தலைவர் தோழர்.VP.காத்தபெருமாள்
மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர்.அரியலூர் ஆறுமுகம்
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி மாவட்டத்தலைவர் தோழர்.முருகன் மாவட்டப்பொருளர் தோழர்.பூபதி ஆகியோர்
கிளைமாநாட்டை வாழ்த்தியும் ஓய்வூதியர்தின சிறப்பையும்
விரிவாக விளக்கிப்பேசினர்.

சிவகங்கை கிளைச்செயலர் தோழர்.சந்திரன் வாழ்த்து சொன்னதோடு கிளைக்கு ₹1000/- நன்கொடையும் அளித்தார். 
கிளையின் இணைச்செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்கள் நன்றிகூற கூட்டம் முடிந்தது.


No comments:

Post a Comment