Monday 17 December 2018

16-12-2018 அன்று மதுரை மாவட்ட AIBSNLPWA சங்கம் ஓய்வூதியர் தினத்தை சிறப்பாக கொண்டாடியது. தமிழ் மாநில செயலர் தோழர் R .வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மாவட்ட தலைவர் தோழர் சத்யசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தோழர் வீராசாமி அனைவரையும் வரவேற்று பேசினார் தம்முடைய பரப்புரையில் மதுரை மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கையை பெருக்கி வருவதாகவும் , சமீபத்தில் பேரழிவினை ஏற்படுத்தியுள்ள கஜா புயலினால் துயருற்று வாடும் தஞ்சை,நாகை , திருவாரூர் மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ 50,000/- வசுல் ஆகியுள்ளதாகவும் , அதற்கான காசோலையை மாநில செயலரிடம் அளிப்பதாக கூறினார். இனி அடுத்த ஆண்டு முதல் 70 வயது அடையும் நம் தோழர்கள் கவுரவிக்கலாம் எனும் தன் அவாவினை கூறி அதை அனைவரும் ஆமோதிக்க இனி வரும் ஆண்டுகளில் 75 க்கு பதிலாக 70 வயது அடையும் தோழர்கள் கவுரவிக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் நல நிதி திரட்டி உறுப்பினர் யாரேனும் இயற்கை எய்திவிட்டால் உடனடி செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட நிதியினை வழங்கலாம் என்றார் . இது குறித்து அடுத்த சந்திப்பில்  விவாதித்து முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
 மாவட்ட உதவி செயலர் தோழர் சூரியன் தனது கருத்துரையில் மதுரை மாவட்டத்தில் பழனி, வத்தலக்குண்டு , திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய ஊர்களில் நம் சங்கத்தின் கிளை களை துவக்கலாம் என்கிறார். சிறப்பு விருந்தினர் தோழர் ஆர்வி மிகவும் பயனுள்ள நீண்டதொரு உரையை வழங்கினார். BSNL   ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கு ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அதே விகிதத்தில் வழங்க வேண்டும் அதை அரசின் தொகுப்பு நிதியில் இருந்து வழங்க வேண்டும் எனும் உத்தரவாதத்தை எழுத்து மூலமாக தோழர் குப்தா அவர்கள் பெற்று தந்ததினால் நாம் ஓய்வூதிய கவலையில் இருந்து விடுபட்டுள்ளோம். ஓய்வூதியர்கள் சேவை தேவைப்பட்டால் அவற்றை வழங்க தயாராக இருப்பதாக கூறினார். முதன்மை பொது மேலாளர் திருமதி ராஜம் அவர்கள் நம் சங்கத்தினர் நிர்வாகத்திற்கு அவ்வப்போது அளித்து வரும் சேவைகளுக்கு நன்றி பாராட்டினார். மறைந்த முன்னாள் மாவட்ட தலைவர் தெய்வ திரு ரவீந்திரன் அவர்கள் புரிந்துள்ள உதவிக்கு எத்துணை முறை நன்றி கூறினாலும் தகும். ஓய்வூதியர்கள் எப்போது வேண்டுமானாலும் தம்மை சந்திக்கலாம் என்றும் அவர்களுக்கு உதவ எப்போதும் தயார் என்றார் 
இறுதியாக 75 வயது ஆன 32 பேர்களுக்கு  சால்வை போத்தப்பட்டு , நினைவு பரிசு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில்  மாநில செயலர் 71 வது அகவை பரிசாக மாலை , மலர்க்கீரிடம் அணிவிக்கப்பட்டு பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.  .
தோழர் ராஜாராமன் நன்றி உரைக்குப்பின் கூட்டம் இனிய எண்ணங்களுடன் ,நிறைவு பெற்றது. அனைவருக்கும் சுவைமிகு மதுரை பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது.
விழாவின் மற்ற படங்களைக்கான இங்கே கிளிக் செய்யவும்


















No comments:

Post a Comment