Thursday 23 January 2020


நேற்று 22 1 2020 புதன்கிழமை காலை பட்டுக்கோட்டை ராஜா மஹாலில் பட்டுக்கோட்டை கோட்ட பகுதியை சார்ந்த 33 வீஆர்எஸ்ல் செல்ல இருக்கின்ற தோழர்களுக்கு பாராட்டு விழா திரு பிரகலாதன் கோட்ட பொறியாளர் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நமது முதன்மை பொது மேலாளர் பிஎஸ்என்எல் தஞ்சை மற்றும் உயரதிகாரிகள் பிஎஸ்என்எல் மற்றும் வீ ஆர் எஸ் எல் செல்லும் தோழர்கள் தங்களது குடும்பத்தினருடன் மற்றும் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நமது தஞ்சை மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலர் வீ. சாமிநாதன் மற்றும் பட்டுக்கோட்டை கோட்ட பகுதியை சார்ந்த நமது தோழர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். நமது மாவட்ட செயலர் விழாவில் பங்குபெற்று வாழ்த்துரை வழங்கி வீஆர் எஸ் எஸ் செல்லும் தோழர்களை நமது ஓய்வூதியர்கள் சங்கத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தார். வீ ஆர் எஸ் எல் செல்லும் தோழர்களுக்கு நமது சங்கத்தின் மூலம் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். வாழ்க ,வளர்க, பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம்.
இப்படிக்கு,
தோழமை வாழ்த்துக்களுடன்,
வீ.சாமிநாதன்,
மாவட்ட செயலர்
தஞ்சாவூர்.


No comments:

Post a Comment