Wednesday 23 August 2017

அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல  சங்க அமைப்பு தினம் திருநெல்வேலியில்  22.08.2017 அன்று  கொண்டாடப்பட்டது .

திருநெல்வேலி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன் நிரந்தரக் கொடிக் கம்பம் நிறுவப்பட்டு தோழர்  E.கனகராஜ் அவர்கள் தலைமையில், மாநில துணை செயலர் தோழர் S.சம்மனசு சங்கக்கொடியினை ஏற்றினார் .
விண்ணதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மாவட்ட சங்கம் வெளியிட்டுள்ள பல வண்ண நோட்டீஸை  தோழர். சண்முகசுந்தரராஜ் (திருநெல்வேலி மாவட்ட மத்திய,மாநில,பொதுத்துறை   ஓய்வூதியர்சங்க கூட்ட அமைப்பின் கன்வீனர் ) வெளியிட மூத்த DOT ஓய்வூதியர்தோழர் M.முத்தையா (Sr.AO) பெற்றுக்கொண்டார் .

நோட்டீசும் ,இனிப்பும் சேவையில் உள்ள அனைவருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து விரிவடைந்த மாவட்ட செயற்குழு
 தோழர் E.கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
DOT ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றத்துக்காக
 தோழர்கள் S.சம்மனசு,S.சங்கரலிங்கம் ,P.பழனிவேல் ஆகியோர் கொண்ட நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது .
தோழர் பரமசிவம் நன்றி கூறினார் .


No comments:

Post a Comment