Tuesday 6 November 2018


இன்று அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச்சங்கம், தஞ்சை மாவட்டம் தோழர் V. சாமிநாதன் மாவட்ட செயலர், தோழர் K.சீனு  மாவட்ட பொருளாளர், மற்றும் பல தோழர்கள், தஞ்சை மன நலம் குன்றியோர் காப்பகம் அமைந்திருக்கின்ற அன்பாலயம் சென்று அங்குள்ள 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் தீபாவளி பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடி  தஞ்சை சங்கத்திற்கு மேலும் புகழை சேர்த்திருக்கிறார்கள் .தங்கள் வீட்டில் எப்படி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள் அந்த வகையிலே காலையிலே ஒன்பது மணிக்கு அன்பாலயம் சென்று அங்குள்ள அன்புள்ளங்களை எல்லாம் குளிப்பாட்டி சென்ற வாரம் அளித்த ஆடைகளை அணிவித்து அலங்கரித்து காலையில் சிறப்பு சிற்றுண்டி தீபாவளி பலகாரங்களுடன் வழங்கி ஆனந்தித்து மகிழ்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களை அங்குள்ள திறந்தவெளி அரங்கிற்கு அழைத்துவந்து தீபாவளி பட்டாசுகளை அவர்களுடன் பகிர்ந்து வாண வெடிகளை வெடிக்கச் செய்து அவர்களை மகிழ்வித்தனர் தவிர இன்று தனியாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் தீபாவளி இனிப்பும் காரமும் வழங்கி சிறப்பித்தனர். எல்லோரும் எல்லாமே பெற்றாக வேண்டும் என்ற அளவில் தீபாவளி பண்டிகையை அவர்களும் கொண்டாட வேண்டும் என்ற அளவிலே அவருடன் சென்று தீபாவளி கொண்டாடிய அனைத்து தோழர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

 வாழ்க உங்கள் பணி, வளர்க உங்கள் தொண்டு .
மனித நேயம் இன்னும் இருக்கிறது உங்கள் வடிவிலே !!
வாருங்கள் தோழர்களே 
வண்ண மத்தாப்புகளில் உள்ளம் மகிழ்வோம்.
                   உள்ளம் குதூகளிக்க வயது ஒரு தடை அல்ல 
அனைவருக்கும் சுவை மிகு இனிப்பு காரம். 
ஆனந்தமாக பகிர்ந்துண்போம் 







No comments:

Post a Comment