Sunday 11 November 2018


 ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதமும் 10-11-2018 அன்று கூட்டம் நடந்தது. தலைவர் திரு.K.R.சிவகுமார்  தலைமை தாங்கினார். 80 பேர் கலந்துகொண்டனர்.         


அஞ்சலி:                             
திரு. R.சாமிநாதன் அவர்களின் துணைவியார், திரு. N. பால்ராஜ் அவர்களின் மறைவிற்கும் மவுன அஞ்சலி மற்றும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில அமைப்புச் செயலர் திரு. சாம்பசிவம், சென்னையில் உள்ள MOU மருத்துவ மனைகளின் பட்டியலை உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
22-11-2018 அன்று பென்சன் மாற்றம் கோரி நடக்கவுள்ள உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்றும் மாநில உதவிச்செயலர் திரு.N.S.தீனதயாளன் மாநிலச் சங்க பிரதிநிதியாக கலந்துகொள்கிறார் என்கிற தகவல் தரப்பட்டது.
17-12-2018 பென்சனர் தின விழா மாநிலச் செயலரின் தேதி கிடைத்தவுடன் டிசம்பர்-25-க்குப் பிறகு நடத்துவது என்றும், வழக்கம்போல 70 வயது முதல் 78 வயது வரை உள்ள மூத்த தோழர்களை கெளரப்படுத்துவது என்றும் அவ்விழா நடத்த ஒரு செயற்குழு நடத்தி முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.
22-10-2018 அன்று நடந்த ஆர்ப்பாட்டம் பற்றியும், அதன் தொடர்ச்சியாக GM உடன் நடந்த வாதங்கள் விவரிக்கப்பட்டது. இதுபற்றி மாநிலச் செயலரிடம் கூறியிருப்பதாக செயலர் கூறினார். GM-ன் போக்கை எதிர்த்து ஊழியர் சங்கங்களே போராடாத நிலையில் அதை நமது AIBSNLPWA சங்கம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதை அனைவரும் பாராட்டினர். நமது போராட்டத்தை வாழ்த்திய மற்ற மாவட்ட, மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. பொருளாளர் திரு.R.லோகநாதன் நன்றி கூறினார்.



No comments:

Post a Comment