Friday 26 October 2018


அகில இந்திய BSNL  ஓய்வூதியர்கள் நலசங்கம்,
தஞ்சை மாவட்டம்.
 இன்று 25 10 2018 வியாழக்கிழமை தஞ்சை BSNL ஓய்வூதியர்கள் நல சங்கம் மற்றும் BSNL  உதவும் உள்ளங்கள் தஞ்சை , சார்பில் தஞ்சையில் அமைந்துள்ள அன்பாலயம் என அழைக்கப்படுகின்ற மனநலம் குன்றியோர் பாதுகாப்பு இல்லத்தில் தீபாவளி விழா நிகழ்ச்சிகள் பண்டிகைக்கு முன்னரே இனிதாக கொண்டாடப்பட்டது .
இதில் திரு C. வினோத் PGMT , BSNL  தஞ்சை மற்றும்
V. சாமிநாதன், மாவட்ட செயலர், K .சீனு மாவட்ட பொருளாளர், பிரான்சிஸ் சேவியர் ,மாநில அமைப்பு செயலாளர் M இருதயராஜ், மாவட்ட துணை தலைவர் மற்றும் நமது சங்கத்தின் முன்னணி தோழர்கள் அன்பாலயா உறுப்பினர்கள் சுமார் 60 பேர் கலந்துகொண்டு விழாவினை  சிறப்பித்தார்கள். முதலாவதாக அனைவருக்கும் தீபாவளி இனிப்பு கார வகைகள் வழங்கப்பட்டு சிறந்ததொரு இயற்கையான சூழ்நிலையில் அன்பு ஆலயத்தில் தங்கி பராமரிக்கப்பட்டு வரும் 30 மகளிருக்கு இன் ஸ்கர்ட்டும் நைட்டியும் 30 ஆடவர்களுக்கு டி-ஷர்ட்டும் பெர்முடாஸ் மற்றும் அங்குள்ள ஆண் ஊழியருக்கு பேண்டும் சர்ட்டும் பெண் ஊழியருக்கு புடவையும் ஜாக்கெடும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள.

இந்த ஆனந்த தருணத்திலே அவர்கள் முகத்தில் மின்னிய சந்தோஷ காட்சிகள் என்றுமே வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு உன்னதமான நிலையை உண்டாக்கி எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்ற கூற்றை நினைவுபடுத்தியது.  
இதுபோன்று வருடா வருடம் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் இது மாதிரியான நிகழ்ச்சிகளை தஞ்சை மாவட்ட சங்கம் நடத்தி வருகிறது. இந்நிகழ்வுகள் இன்னும் தொடர இறைவனின் ஆசிகளை வேண்டி பிரார்த்திக்கிறோம். கலந்துகொண்டு சிறப்பித்த PGMT  மற்றும் சங்க தோழர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம். 
இப்படிக்கு ,
கே .சந்தான கோபாலன்,
துணைத்தலைவர்
அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல சங்கம,
தஞ்சை மாவட்டம். 







1 comment:

  1. அருமையான முன்னோடியான செயல் மகிழ்ச்சியாக உள்ளது

    ReplyDelete