Monday 29 October 2018

28 10 2018 ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் சிறப்பு பொதுக் கூட்டம் மாலை 4 மணியளவில் திருவாரூர் தொலைபேசி வளாகத்தில் திருவாரூர் தோழர்களுக்காக சிறப்பானதொரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் V. கண்ணப்பன், இணைச் செயலர் தலைமை ஏற்க தோழர் டி முருகேசன் மாநில உதவிப் பொருளாளர் முன்னிலை வகிக்க தஞ்சை மாவட்ட செயலர் V. சாமிநாதன் வழிநடத்த கூட்டம் இனிதாக நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலர் வி. சாமிநாதன் அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் 78.2, எம் ஆர் எஸ் இன்றைய நிலவரம் மற்றும் ஓய்வு ஊதிய மாற்றம் பற்றியும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பட்டுக்கோட்டை திருவாரூர் போன்ற பகுதிகளில் அங்குள்ள தோழர்களுக்காக ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதம் என்ற முறையிலே சிறப்பாக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் முதலாவதாக சென்ற மாதம் பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடந்தது பற்றியும் இந்த மாதம் திருவாரூர் பகுதியில் நடப்பது பற்றியும் விடுபட்ட ஊர்களில் வரும் காலங்களில் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தி அங்குள்ள தோழர்களுக்கு செய்திகளை பகிரவும் எல்லா தோழர்களையும் ஒருங்கிணைக்கும் முகத்தான் இத்தகைய பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடத்துவது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றி உரைக்கு பிறகு கூட்டம் இனிதே முடிவுற்றது. இப்படிக்கு
K. சந்தான கோபாலன், 
துணை தலைவர், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் ,
தஞ்சை மாவட்டம்



No comments:

Post a Comment