Monday 9 October 2017

 காரைக்குடி கிளைக்கூட்டம் 07-10-2017 அன்று காலை 10-30 மணிக்குகிளைத்தலைவர் தோழர் I.யாக்கூப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிளைச்செயலர் தோழர் K.சுந்தரராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்டத்தலைவர் தோழர் .ஜெயச்சந்தின் மற்றும் மாவட்டச்செயலர் தோழர் P.முருகன் அவர்களும் மாநிலச்செயற்குழுவை நடத்துவற்கான வழிமுறைகள்பற்றியும் திட்டமிடல் பற்றியும் நிதித்தேடல்பற்றியும் விரிவாகப்பேசினர்.
மருத்துவப்படி பட்டுவாடாவில் உள்ள அனாமலி பற்றியும் 78.2% நிலுவைத்தொகை  இன்னும் சிலபேர்களுக்கு போடப்படாதது குறித்தும் எதிர்கால ஓய்வூதிய மாற்றத்தில் நமது சங்க நிலைபாடு குறித்தும் அதற்காக நமது சங்கம் எடுத்துவரும் முயற்சி கள் குறித்தும் மாநில துணைச்செயலர் தோழர் N.நாகேஷ்வரன் அவர்கள் விரிவாகப்பேசினார்.

08-10-2017 அன்று காலை இராமநாதபுரத்தில் நடந்த கிளைக்கூட்டம்.

மாவட்டச்செயலர் தோழர் முருகன் அவர்களும்  தோழர் நாகேஷ்வரன் அவர்களும்  கலந்துகொண்டனர். 13 மகளிர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Photos Taken from Ramnad Meeting Given Below.



No comments:

Post a Comment