Friday 27 January 2017

சரித்திர புகழ்மிகு AIBSBNLPWA சங்கத்தின்,  துடிப்புள்ள  கடலூர் மாவட்டம் ஆற்றற்கரிய செயல்களை முனைப்பாக செய்து வருகிறது.
600 தோழர்களைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் 553 தோழர்கள் ஆயுட்கால சந்தா தோழர்கள். மாதாமாதம் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மனதிற்கு தெம்பளிக்கும் விஷயம்.

தியாக துர்கம் , சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை , வடக்க நங்கல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சியில்  ஒரு  மாபெரும் கூட்டம்  27-01-2017 வெள்ளிக்கிழமை காலை , தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.

தோழர் L .ஜெகந்நாதன் தலைமை வகிக்க, தோழர் நஸீர் பாஷா முன்னிலை வகிக்க , தோழர் P .அழகிரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
வாழ்த்துரை வழங்கியோர் : தோழர் இளங்கோவன் , மாவட்ட தலைவர் ,
தோழர் K .வெங்கட்டரமணன்   மாவட்ட துணை தலைவர் ,
 தோழர் N .திருஞானம்.மாவட்ட செயலர்,
 தோழர்  K.சந்திரமோஹன்  மாவட்ட அமைப்புச்செயலர் .
சிறப்புரை                                       
தோழர். K .முத்தியாலு   தமிழ்மாநில செயலர் ,
தோழர் K .இரவீந்திரன் மாவட்ட துணைத்தலைவர் 
நன்றியுரை                                    
தோழர்  கே .செல்லையா .

இந்த எழுச்சிமிக்க கூட்டத்தில் தோழர் முத்தியாலு ஆற்றிய உரை மிக மிக மகத்தானது. நம் சங்கத்தின் செயல்பாடுகளை அவர் தெளிவாக எடுத்துரைத்தது, எல்லோர் மனதிலும் நன்கு பதியும் வண்ணம் இருந்தது.

இக்கூட்டத்தின் சிறப்பம்சமாக  11 தோழர்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைந்தனர் .இணைந்த தோழர்களை இருகரம் கொண்டு வரவேற்கிறோம்.
இக்கூட்டத்திற்கு கடலூர், சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம், விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளிலிருந்து 120 தோழர்களுக்கு மேல் வந்திருந்து ஆர்வமாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
கள்ளக்குறிச்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டியில் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெயர்கள் ,
தலைவர்: தோழர் பாலசுப்ரமணியன் ( DE ஒய்வு )
செயலர்  : தோழர் K .செல்லையா 
பொருளாளர் : தோழர் G.  ராஜேந்திரன் 
அமைப்பு செயலர்: தோழர் அர்ச்சுணன் .

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். கடலூர் மாவட்டம் இன்னும் பல்கிப்பெருக வாழ்த்துக்கள்.
 



















No comments:

Post a Comment