Sunday 12 May 2019


காரைக்குடி SSA பரமக்குடியில் மேதின  சங்கக்கொடியேற்றமும் கிளைக்கூட்டமும்.. 
12-05-2019 அன்று காலை 11-00 மணியளவில் பரமக்குடி தொலைபேசி  நிலையத்தில் மேதின சங்கக்கொடியை அகிலஇந்திய உதவி பொதுச் செயலர் தோழர்.அருணாஅவர்கள் பலத்த குரல் ஒலிக்கிடையே ஏற்றிவைத்தார். 
கிளைக்கூட்டம் தோழர்..பாலுச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றதுதலைமை உரையில் சங்கச் செயல்பாடுகள் பற்றியும் மாவட்ட மாநாடு மற்றும் கிளைமாநாடு நடத்தியது பற்றியும் விவரித்து பேசி அனைவரையும் வரவேற்றார். 
தோழர்கள்  காசிநாதன் முருகேசன் (Rtrd,SDE) முருகேசன் (Rtrd,SSS) எழுத்தாளர் ஜெயராமன் புதிய உறுப்பினர்கள் கருப்புசாமி போஸ் சவரிநாயகம் ஆகியோர்  பேசினர் கிளைச்செயலர் இராமசாமி அவர்கள் கிளைச்செயல்பாடு பற்றியும்  உறுப்பினர்கள் பிரச்னை பற்றியும் விவரித்தார். குடும்ப ஓய்வூதியர்கள் செல்வி மற்றும் வள்ளி ஆகியோரின் ஓய்வூதியப் பட்டுவாடா முத்துலட்சுமி அவர்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்த PPO-வை கொடுக்க வைத்தது போன்ற பிரச்னைகளை தீர்க்க உதவிய மாவட்ட சங்கத்திற்கும் மாநிலசங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
மாவட்டச்செயலர் நாகேஷ்வரன் அவர்கள் மருத்துவப்படி பட்டுவாடாவில் ஏற்பட்ட தாமதம்பற்றியும் மருத்துவ அட்டை ஓய்வூதியப் புத்தகம் போன்றவைகளை பாதுகாப்பாக
அதேசமயம் குடும்ப உறுப்பினர் கண் பார்வையில் வைக்கவேண்டிய அவசியம் பற்றியும் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார் கார்ப்பரேட் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட வணிகப்பகுதி சீரமைப்பின் பாதக அம்சம் பற்றியும் பேசினார்.
அகில இந்திய உதவிபொதுச்செயலர் அருணாச்சலம் அவர்களின் சிறப்புரையில்......
BSNL ன் தற்போதைய நெருக்கடியால் ஓய்வூதியர்களின் மருத்துவச் சலுகைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, ஓய்வூதிய மாற்றத்தில் DOT அதிகாரிகள் காட்டும் ஒத்துழையாமை, தபால் அலுவலகத்தில் தடுமாறும் நமது பென்சன் மற்றும் IDA பட்டுவாடா  SAMPANN போன்றவைபற்றி மிகவிரிவாக விளக்கவுரையாற்றினார். முருகேசன் அவர்கள் நன்றி கூற
கூட்டம் இனிதே முடிந்தது. 64 பேர்கொண்ட கிளையில் 5 மகளிர் உட்பட 35 பேர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment