Wednesday 8 May 2019


7.5.19 செவ்வாய்கிழமை கடலூர் மாவட்ட சிதம்பரம் பகுதி AIBSNLPWA வின் மே தின விழாவும் மாதாந்திர சிறப்புகூட்டமும் சிதம்பரம் மணற்றோ ஹோட்டலில் சிறப்பாக நடத்தப்பட்டது. தோழர் N.தக்ஷிணாமூர்த்தி தலைமை ஏற்க தோழர்.A.ஜெயகுமார் வரவேற்புரை வழங்கி தொகுத்து வழங்கினார். 50 .க்கும் மேலான தோழர்கள் 15 தோழியர்கள் உள்பட கலந்து கொண்டது மிக சிறப்பு.
இன்றைய விழாவின் செலவுகளை மதிய விருந்து உள்பட தோழியர்.ஜெயந்தி பாண்டியன் ஏற்றுக்கொண்டு அவரும் இன்றைய கூட்டத்தில் சால்வை அணிவித்து பாராட்டப்பட்டார். அது போலவே இந்த மாதம் முடிவில் பணி ஓய்வு பெற உள்ள தோழர். G.S.குமார் நம் சங்க செயல்பாட்டினை பாராட்டி தம்மை நம் சங்கத்தில் ஆயுள் சந்தா உறுப்பினராக  சேர்ந்தார் . அவர் BSNLEU கடலூர் மாவட்ட சங்கத்தில் அனைத்து முக்கிய பொறுப்புகளில் இருந்த போதிலும் நம் நல சங்கத்தில் இணைந்து கொள்வது பாராட்டுக்குரியது.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் .P.ஜெயராமன் தோழர் N.திருஞானம் , மாவட்ட செயலாளர். தோழர்.R.அசோகன்  சிறப்பு உரையாற்றினர். முடிவில் தோழர் ராஜசேகரன் நன்றி உரை நிகழ்த்தி விழா இனிதே முடிவுற்றது.


No comments:

Post a Comment