Tuesday 30 March 2021

 

Recently AIBSNLPWA, Andhra pradesh Circle had scheduled to hold Circle Executive Committee meeting of Andhra pradesh Circle in Guntur on 27-03-2021. But due to spreading of Corona pandemic, it was decided to hold CEC virtually on the same day itself. 

Our CHQ leaders Coms. P.S.Ramankutty CHQ President, D.Gopalakrishnan CHQ VP and  P. Gangadararao GS had spoken online through Videos. Here two Videos one of Com PSR and the other by Com. DG are posted. Com GS Video will be posted soon after getting the copy.

Links are given below. By clicking the links, respective videos could be seen. We comrades are longing for more than a year to attend meetings and conferences and hear the speeches of our great leaders. But could not get chances due to COVID 19. At this juncture here both are really a great boon and really a great feat. Switch on the speakers and listen. 

  Com. PSR Speech Video

https://www.youtube.com/watch?v=WYdQ3DwnmT4

Com. DG Speech Video

https://www.youtube.com/watch?v=f7UZzp3iASU


Friday 26 March 2021

 

Regarding migration to CGHS by FP and reimbursement of one time payment, we took up the issue with corporate office. TN circle also sought clarification an year before from the corporate office.
Our AGS com Anupam kaul continuously pursued it.
Atlast corporate office issued the necessary clarification today and the order is given below.

P Gangadgara Rao, GS





Monday 22 March 2021

 

Paramakkudi Br. New Office Bearers


 

AIBSNLPWA THANJAI DISTRICT   21.03.2021. 
 இன்று காலை 10 மணி அளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் இனிதாக தொடங்கி மதியம் 2 மணி அளவில் முடிவுற்றது. கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் விழாவினை இந்த கொரோனா காலத்திலும் கலந்து கொண்டு பிறப்பித்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

இன்றைய விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ வி ஸ்ரீகுமார் ITS ,GMT  BSNL தஞ்சாவூர், திரு பொன்.வை. கருணாநிதி ITS  PGM ஓய்வு BSNL  தஞ்சாவூர் மற்றும் மனிதநேய மருத்துவர் ஷர்மிளா பேகம் B.S.M.S. அரசு மருத்துவர் ஒரத்தநாடு ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தவிரவும் நமது மதுரை மாவட்ட செயலாளர் தோழர் வீராசாமி மதுரை மாவட்ட பொருளாளர் தோழர் சீனிவாசகன் ஆகியோரும் நமது அழைப்பினை ஏற்று விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை வாழ்த்தி உரையாற்றி சிறப்பித்தனர்.

மேற்கூறிய சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக சிறப்புகள் செய்யப்பட்டன. பொன்னாடை சந்தன மாலை நினைவுப்பரிசு வழங்கப்பட்டு முறையாக நமது உறுப்பினர்களால் சிறப்பிக்கப்பட்டனர்.

இன்றைய விழா நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்று தனது தலைமை உரை ஆற்றிவிழாவினை தொடங்கி வைக்க தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் வரவேற்புரை ஆற்றினார். தோழர்கள் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் தோழர் ஏகே தனபாலன் கௌரவ தலைவர் துணைத்தலைவர்கள் தோழர் எம் இருதயராஜ் தோழர் கே சந்தான கோபாலன் ஆகியோர் விழாவினை வாழ்த்தி உரையாற்றினர். இந்த நேரத்தில் அவைக்கு வந்த மதுரை மாவட்ட செயலர் தோழர் வீராசாமி மதுரை மாவட்ட பொருளாளர் சீனிவாசகன் ஆகியோரை வரவேற்று கௌரவிக்கப்பட்டு பொன்னாடை சந்தனமாலை நினைவு பரிசு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். மதுரை தோழர்கள் இருவரும் தங்களது சிறப்பு உரையில் தஞ்சை மாவட்ட சங்கத்தின் சிறப்பினைப் பற்றியும் தஞ்சை மாவட்ட செயலர் தோழர்  சாமிநாதன் சாதனைகள் பற்றியும் சிலாகித்துப் பேசி ஒரு சிறந்த உரையினை ஆற்றி நிறைவு செய்தனர்.

உலக மகளிர் தின விழாவிற்கு தோழியர் S.சந்திரகுமாரி டிஜிஎம் ஓய்வு மற்றும் தோழியர் சீ. பொன்னழகு டிஜிஎம் ஓய்வு ஆகியோர் முறையே தலைமை வகிக்கவும் முன்னிலை வகிக்கவும் தோழியர் ஆர். கோதாவரி வரவேற்புரை ஆற்றினார்.

இன்றைய முக்கிய நிகழ்வான பட்டிமன்றம் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டது.பட்டிமன்ற தலைப்பு பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருப்பது உறவினர்களின் ஊக்கமே மற்றும் சமுதாய மாற்றமே . நடுவராக பணியாற்றிய பிவிகே ஐயா அவர்களின் தீர்ப்பு உறவினர்களின் ஊக்கமே என்ற அணிக்கு சாதகமாக அளித்தது

பட்டிமன்ற நிகழ்வுகள் நிறைவுபெற்ற பின் தஞ்சை பொது மேலாளர் பிஎஸ்என்எல் ஸ்ரீ ஏவி ஸ்ரீ குமார் ஐடிஎஸ் அவர்கள் விழாவினை வாழ்த்தி அருமையான ஒரு உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக மனிதநேய மருத்துவர் திருமதி ஷர்மிளா பேகம் BSMS அரசு மருத்துவர் ஒரத்தநாடு அவர்கள் த்தமருத்துவ முறையினைப் பற்றி சிறப்பானதொரு உரையினை அனைவரும் முழுதும் புரிந்து கொள்ளும்படியான நடையிலே உரையாற்றினார்கள்

தோழர் என் வீரபாண்டியன் முதன்மை ஆலோசகர் தஞ்சை மாவட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் மற்றும் தோழியர் லைலா பானு தோழியர் வி.டி. அருட்செல்விஆகியோர் சிறப்பான ஒரு வாழ்த்து உரையினை ஆற்றி அமர்ந்தனர். தோழியர் டி உஷா நன்றி உரையினை நவில விழா இனிதாக நிறைவு பெற்றது.

விழாவின் நிறைவினிலே அனைவருக்கும் தஞ்சை பாரம்பரிய மதிய உணவு அளிக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.
தோழமை வாழ்த்துக்களுடன்,
வீ. சாமிநாதன்,
மாவட்ட செயலர்,   தஞ்சாவூர்.


Saturday 20 March 2021

 

We sent the letter to Shri P K Sinhaji, Member (F) on 02/02/2021 and the above order was issued within 10 days of time. We thank Member F for his prompt action.
P Gangadgara Rao, GS.

Endorsement of FMA order  copy to our Association  clearly  indicates that  this  clarification  was issued  only  after  our  taking up the  case.
R.Venkatachalam  CS


 


Wednesday 17 March 2021

 

நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ படி (Fixed Medical Allowance )  மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதந்தோறும் ரூபாய் 1000 அவர்கள் CGHS   மருத்துவ மனை வரம்பிற்குள் வராத பகுதிகளில் வசித்தால் (ஒவ்வொரு மாதம் மும்) ஓய்வூதிய தோடு சேர்த்து வழங்க படுகிறது. BSNL ல் இருந்து IDA சம்பளத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று 21.10.2019 ல் தொலை தொடர்பு இலாக்கா (DOT) உத்தரவினை சுட்டி காட்டி, நமது மத்திய சங்க பொதுச் செயலாளர் 02.02.2021  அன்று திரு P. K. சின்ஹா, நிதித்துறை உறுப்பினர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.
உத்திரவு எண் 13-6/2020-21/BA&IT/54 to 86  04.03.2021 தேதியிட்ட உத்திரவை எல்லா தொலை தொடர்பு மாநில கணக்காயர்களுக்கும் ( Pr. CCA ) அனுப்பி ரூபாய் 1000 கொடுப்பதற்க்கான ஆயத்த பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தியத்தின் அடிப்படையில்,   நமது   Jt. CCA திரு பாலசுப்பிரமணியம் அவர்களிடம் விவாதிக்க பட்டது. விரைவில் இந்த மருத்துவ படியை நமது  ஓய்வூதியர்களுக்கும்  கொடுப்பதற்கான வழி காட்டு முறையை (instructions) விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்து உள்ளார்.

தோழர்களே, BSNL-ல் நிலவும் நிதி நெருக்கடியான சூழலில், மேற்கண்ட உத்திரவு வந்து இருப்பது தமிழகத்தில் உள்ள CGHS   மருத்துவ மனை வரம்பிற்குள் வராத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு  மாதா மாதம் FMA ஓய்வூதியதோடு சேர்த்து பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை CCA அலுவலகம் வெளியிட்ட பின் மேலும் இது குறித்து தெரிவிக்கப்படும். இந்த மருத்துவ Allowance பெறுவதற்கு BSNL  MRS  card surrender செய்ய வேண்டும். CGHS கார்டு பெற வேண்டிய தில்லை.
....Circle Secretary.