Saturday 11 May 2019


11.05 .2019 இன்று நடந்தது. 65 பேர் கலந்து கொண்டனர், . தலைவர் K-R.சிவகுமார் தலைமை தாங்கினார். புதிய உறுப்பினர்கள் கெளரவிக்கப்பட்டனர். நமது ஓய்வூதியர் திரு .A .நாராயணசாமி, SDE (Rtd) அவர்கள் நடத்தும் CBSC ப்ரைனி புளும்ஸ் பள்ளியில் 100  சதவீத தேர்ச்சி பெற்றமைக்கு சால்வை அணிவித்து கெளரவித்தோம்சுற்றுலா ஏற்பாடு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது - மாநில அமைப்புச் செயலர் M.சாம்பசிவம் தனது உரையில் மாநில செற்குழு பற்றியும், உறுப்பினர் சேர்ப்பில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் என்றார்
மாவட்டச்செயலர் தனது உரையில் ஒவ்வொரு ஓய்வூதியரும் தங்களது பென்சன் புத்தகத்தில் மனைவி / கணவன் பெயர் பிறந்த பதிவு () ஆதார் அட்டையில் உள்ளவாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என கவனிக்க வேண்டும். தங்களது வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தில் PPO எண்ணை வங்கி மேலாளரிடம் எழுதச்சொல்லவும் - இது சம்பந்தமாக புதுச்சேரியில் உள்ள வங்கி மேலாளர் களுக்கு நிதி அமைச்சகத்தின் கடித நகலை இணைத்து பென்சனர்களின் வங்கி கணக்கு புத்தகத்தில் PPO நம்பரை எழுத மாவட்டச் சங்கம் கடிதம் எழுதியுள்ளது .நமது பென்சனர் சங்கத்திற்கு மாநில அளவில் ஒவ்வொரு SSA விலும் காலியாக உள்ள இடத்தில் சங்க அலுவலகத்திற்கு இடம் தர மாநில நிர்வாகம் கேட்டதன் அடிப்படையில், அதைப் பற்றி மாவட்ட நிர்வாகங்களிடம் குறிப்பு கேட்கப் பட்டுள்ளது என்ற தகவலை தெரிவித்த போது பலமான கைத்தட்டல் மூலம் உறுப்பினர்கள் வரவேற்றனர்
M. வைத்தியலிங்கம், MV ராமகிருஷ்ணன், N. பட்டாபி , ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
பொருளாளர் R. லோகநாதன் நன்றி கூறினார்.







No comments:

Post a Comment