Wednesday 25 January 2023
Monday 23 January 2023
AIBSNLPWA வேலூர் மாவட்ட திருவண்ணாமலை கிளை ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய கொடியை தோழர் S தாமோதரன் ஏற்றினார்,
AIBSNLPWA கொடியை தோழர் R பாஸ்கரன் ஏற்றினார்.
அப்போது தோழர் கிருஷ்ணாமூர்த்தியின் விண்ணதிரும் கோஷங்களுடன் மாநாடு துவங்கியது.
கிளைத்தலைவர் தோழர் A பழநி அனைவரையும் வரவேற்று பேசினார். கிளைச்செயலர் தோழர் N பாலகிருஷ்ணன் செயல்பாட்டறிக்கையை சமர்பித்தார் அதில் தனது செயல்பாட்டினை தெளிவு படுத்தினார்.
பொருளாளர் தோழர் S பரசுராமன் நிதி நிலை அறிக்கையை சமர்பித்து கையிருப்பு தொகையை மிகுதியாக வைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
நடப்பாண்டிற்கு கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கௌரவ தலைவர் :- தோழர் T M சந்திரசேகரன்.
தலைவர் :- தோழர் G P வின்சன்ட் ராஜ்குமார்
துணை தலைவர் :- தோழர் A பழநி.
செயலர் :- தோழர் M ரேணு
பொருளாளர் :- தோழர் S பரசுராமன்.
புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட தோழர் M ரேணு நன்றி கூறி மாநாடு இனிதே முடிந்தது.
தோழர் A பலராமன் வீட்டில் பழுத்த வாழைப்பழம் மாநாட்டின் உணவை செம்மைபடுத்தியது.
Tuesday 17 January 2023
இன்று காலை 10-00 மணி அளவில் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி சங்கம் இணைந்து நடத்திய இரண்டாம் கட்ட முதல் நாள் தர்ணா போராட்டம் மிக வெற்றிகரமாக நடைபெற்றது. சுமார் 500 தோழர்களுக்கு மேல் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள். விண்ணதிர கோஷங்கள் எழுப்பப்பட்டன
தோழர் D. பாலசுப்ரமணியன் AIFPA பொதுசசெயலாளர் துவக்கி வைத்து உரையாற்றினார் . தோழர் D. கோபாலகிருஷ்ணன் CHQ தலைவர் , மற்றும் தோழர்கள் V ராமராவ் ,. A .சுகுமாரன், V. ரத்னா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள் .இரண்டாம் கட்ட இரண்டாம் நாள் தர்ணா நாளையும்
(18-01-2023) CCA அலுவலக வளாகத்தில் நடைபெறும் . அதில் இன்று கலந்து கொண்டவர்களை விட , இன்னும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பேச்சாளர்களும் கோரிக்கை விடுத்தார்கள்.
தோழர்களே நாளை அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு , நம் கோரிக்கை வென்றடைய பாடுபடுவோம்
Subscribe to:
Posts (Atom)