Saturday 27 August 2022

21.8.2022 காலை விழுப்புரத்தில் நடைபெற்றது. மாவட்ட உதவிச்செயலர் தோழர் P.கலிவரதன் தலைமையில் நடைபெற்றது 15 தோழியர் உட்பட 120 தோழர்கள் கலந்துகொண்டனர் கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, நெய்வேலி, திண்டிவனம், செஞ்சி, திருக்கோயிலூர் மற்றும் விருதாச்சலம் பகுதிகளில் இருந்து தோழர்கள் கலந்துகொண்டனர். பகுதி செயலர் தோழர் G.கணேசன் வரவேற்பு உரையாற்றினார்.
சேலம் மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சங்க நிர்வாகிகளை வாழ்த்தி தோழர்கள் மாவட்ட தலைவர் P.ஜெயராமன், மாவட்ட செயலர் R அசோகன் மற்றும் மாவட்ட அமைப்பு செயலர் R.செல்வம், K. ராதாகிருஷ்ணன், G.ராமசந்திரன், மாவட்ட உதவி செயலர் ஜெயக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வரசுமேரி, தோழியர் விமலா நெய்வேலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் R செல்வம், மாவட்ட துணை தலைவர் J வெற்றி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் S பாஸ்கர்முன்னாள் பகுதி செயலர் S வீரமணி, முன்னாள் பகுதி செயலர் K தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
மாநில அமைப்பு செயலர் தோழர் K.வீரராகவன், மாநிலத் துணைத் தலைவர் தோழர் N. திருஞானம் (N.T) ஆகியோர் ஏற்புரையாற்றினார்
நிறைவாக மாநில செயலர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன் பென்ஷன், CGHS, நம் முன் உள்ள பிரச்சனைகள், அமைப்பு தினம் போன்ற பல்வேறு செய்திகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்
பகுதி பொருளர் தோழர் M ராஜ்குமார் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
மதிய உணவு மாநில அமைப்பு செயலர் தோழர் K.வீரராகவன் வழங்கினார். சால்வைகள் தோழர்கள் P.கலிவரதன், D.சண்முகசுந்தரம், பகுதி மூலம் அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது
இன்றைய கூட்டத்தை சிறப்பாக நடத்திய விழுப்புரம் தோழர்களை மாவட்டச் சங்கம் பாராட்டுகிறது.

No comments:

Post a Comment