Monday 23 December 2019

இன்று திருச்சியில் ஓய்வூதியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10-00 மணிக்கு துவங்கிய கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர்.V.P.  காத்தபெருமாள் தலைமை ஏற்று தலைமை உரை நிகழ்த்தினார். முதலில் மறைந்த நம் அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S. அருணாச்சலம் அவர்களுக்கும் , மற்றும் சமீப காலங்களில் மறைந்த நம் தோழர்களுக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
மாவட்ட செயலர் தோழர் T.செல்வராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் முக்கிய விருந்தினராக தோழர் R .வெங்கடாச்சலம் தமிழ் மாநில செயலர் கலந்து கொண்டு சுமார் 1 மணி 30 நிமிடங்கள் தற்போதைய நம் பிரச்சினைகளையும், சங்க செயல்பாடுகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார் . 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை நமக்கும் அமல் படுத்த நாம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கினார். MRS திட்டத்தில் இருந்து CGHS  திட்டத்திற்கு மாறும் படி கூறினார்.விருப்ப ஓய்வில் வரவிருக்கும் தோழர்களை பெருவாரியாக நம் சங்கத்தில் இணைய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தனார்.
கூட்டத்திற்கு 250 உறுப்பினர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தின் வரவேற்கவேண்டிய விஷயம் என்னவென்றால்,  விருப்ப ஓய்வு கொடுத்த  அரியலூர் பகுதி 15 தோழர்கள் நமது மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் ஆறுமுகம் முயற்சி யாலும் பொன்னமராவதியில் 7 தோழர்கள் அப்பகுதி முன்னணி தோழர் நாகராஜன் முயற்சி யாலும் இன்று திருச்சி யில் நடைபெற்ற கூட்டத்தில் நமது அமைப்பில் உறுப்பினர் ஆயினர். இப்பணி, இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறவேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.
மாவட்ட பொருளாளர் தோழர் சுதர்சனம் நன்றி நவில கூட்டம் இனிய நினைவுகளுடன் முடிவுற்றது.  கூட்டம் முடிவடைந்ததும் அனைவருக்கும் சுவைமிகு மத்திய உணவு பரிமாறப்பட்டது








No comments:

Post a Comment