Sunday 15 December 2019


AIBSNLPWA தஞ்சை மாவட்டம் 
     பென்ஷனர் தினக் கூட்டம்
ன்று 14-12-19 காலை 10 மணியளவில் தஞ்சை ரயில் மண்டபத்தில் பென்ஷனர் தினக் கூட்டம் திரு. ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அடாத மழையிலும் 120 தோழர்கள் பங்கேற்றது பெரும் சிறப்பு.
தலைவர்கள் சேவியர், பிரின்ஸ், கே.எஸ்.கே,  தனபால், செயலர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
8 தோழர், தோழியரின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
தோழர்கள் என். நடராஜன், நெப்போலியன், இருதயராஜ், வீரபாண்டியன், வினோத் GM, C.V.தங்கையன், ஆர். ராஜேந்திரன், மல்லிகா சுகுமாரன், சிவசிதம்பரம்
ஆகியோர் பேசினார்கள். தோழர் வீரபாண்டியன் அவர்களின் உரை முத்தாய்ப்பாக இருந்தது.
இறுதியாக மாவட்ட செயலர் தோழர் சாமிநாதன் அவர்களின் உரைக்குப் பின் பொருளாளர் சீனு அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நடைபெற்றது. அனைவருக்கும் மதிய உணவளித்து கூட்டம் நிறைவடைந்தது.





No comments:

Post a Comment