Sunday 29 December 2019


தருமபுரி மாவட்டச் சங்கத்தின் சார்பில் "ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் " 28-12-2019 சனிக்கிழமை காலை சுமார் 11-00மணியளவில் மாவட்ட தலைவர் தோழர் முனியன் தலைமையில், மாவட்ட கவுரவத்தலைவர் தோழர் வி சுந்தரம், ஒசூர் கிளைச்செயலாளர் தோழர் சத்தியேந்திரன்,தருமபுரி கிளை துணைத்தலைவர் தோழர் குப்புசாமி,கிருஷ்ணகிரி துணைச்செயலாளர் தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க சிறப்பான முறையில் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். தோழர் சத்தியேந்திரன் அஞ்சலி உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் தோழர் வேடியப்பன் அவர்கள் சிறப்பு கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னிலை வகித்த தோழர்களின் வாழ்த்துரைக்குப்பின் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தோழர் R.துரை வாழ்த்துரை வழங்கினார்.தோழியர்கள் சார்பில் தோழியர்.ஞானவடிவாம்பாள் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.நிர்வாகத்தின்  சார்பில் திரு.வித்யாசாகர் (துணைப்பொதுமேலாளர் -நிர்வாகம்) அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.அகவை 70 நிறைவு பெற்ற தோழர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நமது மாநிலச் செயலாளர் தோழர் R.V அவர்கள் தனது சிறப்புரையில் ஓய்வூதிய மாற்றத்துக்காக நமது அகில இந்திய சங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், VRS குறித்தும், CGHS குறித்தும் விரிவாக விளக்கி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
 மாவட்ட பொருளாளர் தோழர் வணங்காமுடி நன்றி கூற கூட்டம் சுமார் 3 மணியளவில்  நிறைவுற்றது. 6பெண்கள் உட்பட 80 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வடை பாயசத்துடன் மதிய உணவு வழங்கப்பட்டது. 
தோழமையுடன்
சுப்ரமணியம்
மாவட்டச்செயலாளர்
தருமபுரி.











No comments:

Post a Comment