Tuesday 18 December 2018

PENSIONERS' DAY CELEBRATION IN THIRUNELVELI
அகில இந்திய  BSNL  ஓய்வூதியர்   நல சங்கத்தின்  திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பாக 17.12.2018 திங்கட்கிழமை பாளையம்கோட்டை சுபம் திருமண மண்டபத்தில்  மாவட்ட தலைவர் தோழர் S .சம்மனசு தலைமையில் ஓய்வூதியர்    தின விழா கொண்டாடப்பட்டது. 40 பெண்கள் உட்பட 350 ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர் . அனைவராலும் அன்புடன் UTK என்று அழைக்கப்படும்திருமலை குமாரசாமி அவர்கள்   மதிய  விருந்திற்க்கான செலவினை ஏற்றுக்கொண்டார் . அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் . 
கஜா புயல் நிவாரணநிதியாக  ரூ .1,30.000 ஐ  மாவட்ட பொருளாளர் தோழர் பெருமாள்ராஜ் அவர்கள்  மாநில செயலர் தோழர் R.வெங்கடாச்சலம் அவர்களிடம் வழங்கினார் . 
 70 , 80 வயது நிரம்பிய   28 சேம நலத்திட்ட  உறுப்பினர்களுக்கு  
( ஓய்வூதியர்களுக்கு ) மாநில செயலர் ரூ .500 / - ரொக்க பரிசளித்து கெளரவித்தார்.  70 , 80 வயது நிரம்பிய 28 ஓய்வூதியர்களுக்கு தோழர் E.கனகராஜ்  அவர்கள் சால்வை அணிவித்து கெளரவித்தார்.  மாவட்ட செயலர் தோழர் S.அருணாச்சலம் வரவேற்புரைக்குப்பின் மாநில செயலர் தோழர் R.வெங்கடாசலம் சிறப்புரையாற்றினார் . சிறப்புரையில்  
ஓய்வூதியர்    தின  விழாவின் சிறப்பு எடுத்துரைத்தார் . இப்போது ஓய்வூதியம் அடிப்படை உரிமை என்று உள்ளது . 7 வது சம்பளக்குழு பரிந்துரைப்படி
 பென்ஷன் மாற்றம் ,நமது ஒரே கோரிக்கை , 
BSNL ளுக்கு அரசு பென்ஷன் வாங்கி தந்த தோழர் குப்தா அவர்களுக்கும்,
தோழர் வள்ளிநாயகத்திற்கும் நன்றி கூறினார் . 01.01.2017 முதல் 78.2 % வாங்கும் முயற்சியில்  வெற்றி பெறுவோம் என விளக்கமளித்தார் 
இறுதியில் மாவட்ட துணை தலைவர் தோழர் S.துரைராஜ் அவர்கள் நன்றி கூறினார் .









No comments:

Post a Comment