Tuesday 11 December 2018

                 தஞ்சையில் முப்பெரும் விழா 
10 12 2018 திங்கட்கிழமை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா வான ஏழாவது மாவட்ட மாநாடு ஓய்வூதியர்கள் தின விழா 15வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் தஞ்சை கல்லு குளம் நாஞ்சிக்கோட்டை சாலையில்  அமைந்துள்ள திரு இருதய மறைமாவட்ட பேராலய மக்கள் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. தோழர் சந்திர பிரகாஷ் நினைவரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய மாநாடு மாலை ஆறு மணிக்கு நிறைவுற்றது. கிட்டத்தட்ட 400  தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் ஜி நடராஜன் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் டி ராமாராவ் தமிழ் மாநிலத் தலைவர் தோழர் வெங்கடாசலம் தமிழ் மாநில செயலர் ஆகியோர் அழைக்கப்பட்டு பங்குபெற்று சிறப்பித்தனர்.

தோழர் சாமிநாதன் மாவட்ட செயலர் தன்னுடைய வரவேற்புரையில் மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறி அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று தனது வரவேற்பு உரையை நிறைவு செய்தார். பிறகு 71 வயதை அடைந்துள்ள தோழர்கள் வெங்கடாசலம் மாநில செயலர் , சந்தானகோபாலன் மாவட்ட துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் உறுப்பினர் ஆகியோருடைய பீமரத சாந்தி விழா தம்பதியருக்கு ஆளுயர ரோஜா மலர் மாலை அணிவிக்கப்பட்டு கேக் வெட்டி உறுப்பினர்கள் அனைவரது வாழ்த்துக்களுடனும்  சிறப்பாக கொண்டாடப்பட்டது .தவிரவும் இந்த மாதம் பிறந்த தினம் வாய்க்கப்பெற்ற தோழர் தோழியர்கள் அனைவரும் கேக் வெட்டி வாழ்த்துக்களுடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

 அடுத்து தோழர்கள் ஜி நடராஜன் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் ராமாராவ் மாநிலத்தலைவர் தோழர் வெங்கடாசலம் மாநில செயலர் ஆகியோரை சிறப்பித்து பொன்னாடை ஆள் உயர ரோஜா மாலை அளிக்கப்பட்டு தஞ்சை பெரியகோயிலின் உருவம் கொண்ட நினைவுப் பரிசு மற்றும் தஞ்சை தலையாட்டி பொம்மை இனிப்பு வகைகள்  தஞ்சை முந்திரி ஆகியவை உறுப்பினர்களின் ஆரவாரத்துடன் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர.

தோழர் கே எஸ் கே தோழர் கே டி அவர்களது சங்கப் பணியின் பொன் விழா மற்றும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் தஞ்சை சார்பில் தோழர் சாமிநாதன் சமுதாய பணிக்கான பெரும் கொடையாளர் தோழியர் சந்திரகுமாரி அவர்கள் விழாவில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு ஆளுயர ரோஜா மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு அனைவரது உறுப்பினர்களின் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டு தங்களது ஏற்புரையில் உரையாற்றி மகிழ்ந்தனர.

நமது மாநாட்டினை மதுரை மாவட்ட செயலர் தோழர் வீராசாமி மதுரை மாவட்ட செயலர் பட்டுக்கோட்டை தோழர்C.V. தங்கையன், தோழர் prince தோழியர் பத்மினி மற்றும் தோழர்கள் கே. கிள்ளிவளவன் NFTE, A. இருதயராஜ்,BSNLEU, பிரபாகரன் AIBSNLEA,A.M.F. ஜெயசீலன்,FNTO முருகையன்,SEWA,அரியலூர் ஆறுமுகம் ,எஸ் ராஜா ராமன் ஆர் விவேகானந்தன் ஆர் மணிவண்ணன் ஆகிய பணியில் உள்ள தஞ்சை பிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளர்கள் ஆகியோர் தங்களது சிறப்பான வாழ்த்துக்களை கூறியதோடு மட்டுமல்லாமல் தங்களது கருத்துக்களையும் நமது சங்கத்தின் பெருமைகளையும் போற்றிப் புகழ்ந்து சிறப்பானதொரு வாழ்த்துக்கள் கூறி உரையை நிறைவு செய்தனர் முதலாவதாக தஞ்சை மாவட்ட சங்கத்தின் வலைதளத்தை பட்டுக்கோட்டை தோழர் சிவசிதம்பரம் அவர்கள் சிறப்பான முறையிலே வலைதள பொறுப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டு நமது தோழர் ஜி நடராஜன் மத்திய சங்க துணைத் தலைவர் வலைத்தளத்தினை பெருத்த ஆரவாரத்துடன் மன்றத்தில் அனைவரது மகிழ்ச்சியுடன் கரவொலிக்கிடையே தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தனது சிறப்புரை மற்றும் ஏற்புரையில் தஞ்சை மாவட்டத்தின் சமுதாய தொண்டினையும் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சை மாவட்டம் ஆற்றிய சேவையினையும் சிறப்பித்து வாழ்த்தி உரையாற்றினார் இன்றைய நிலையில் எம் ஆர் எஸ் பற்றியும் அதற்கு வருங்காலத்தில் நாம் வேறு விதமாக எவ்வாறு பயன்படுவது என்பது பற்றி மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஓய்வு ஊதியம் உயர்வு குறித்தும் ஒவ்வொரு உறுப்பினரும் நமது சங்கத்திற்காக இரண்டு உறுப்பினர்களை சேர்க்க முயற்சி எடுக்கக்கோரியும் சிறப்பானதொரு உரை நிகழ்த்தி நிறைவு செய்தார் தோழர் ராமாராவ் மாநில தலைவர் தஞ்சை மாவட்ட சங்கத்தின் சமுதாய பணியினையும் நாம் அறிவிப்பு  செய்து நடத்தப்படுகின்ற பொன்விழா மணிவிழா பீமரத சாந்தி விழா சதாபிஷேக விழா மற்றும் பிறந்த விழா காட்சிகளை கண்டு மகிழ்ந்து பிற மாவட்ட சங்கங்களிலும் மாநில சங்கத்திலும் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்பட வேண்டுமென்று ஒவ்வொரு மாவட்ட சங்கங்களில் உரை நிகழ்த்தும் போது அறிவுறுத்துவதாகவும் கூறி மகிழ்ந்தார்.

தோழர் வெங்கடாசலம் மாநில செயலர் பொருள் ஆய்வுக் குழுவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் தனது சிறப்பு மற்றும் ஏற்புரையில் இது ஒரு மிக திருப்திகரமான மாநாடு பணியில் இருக்கின்ற சங்கங்கள் கூட நடத்த முடியாத அளவிற்கு சிறப்பாக இந்த மாநில மாநாடு நடைபெறுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது  நம்முடைய 78.2 நிலுவை பெற்று 60 40 முறையையும் நீக்கியது பற்றியும் தற்போது நமது pension உயர்வு மாற்றத்திற்கும் மூன்றாவது பி ஆர் சி கும் எந்த சம்பந்தமும் இல்லை தற்பொழுது உள்ள நிலையில் நாம் எவ்வாறு மற்ற ஓய்வூதிய தங்களுடன் சேர்ந்து இந்த ஓய்வு ஊதியத்தை உயர்த்தி பெறப் போகிறோம் என்பது பற்றியும் நமது ஓய்வூதிய மாதாந்திர பட்டுவாடா அந்த அந்த சிசி   அலுவலகங்களிலிருந்து இனி பெற போவதின் சாதக பாதங்களை பற்றியும் தற்போது நடைபெற இருக்கின்ற பட்டுவாடா சிறந்தது என்றும் தனது 71 வது வயதிலும் சங்கப்பணி ஆற்றுவது பற்றியும் நமது தமிழ் மாநிலம் இந்திய அளவிலே அதிகமான உறுப்பினர்களை கொண்ட மாநிலம் தமிழ் மாநிலம் என்றும் சிறப்பித்து கூறி தனது உரையை  நிறைவு செய்தார்.
 வாழ்க வளர்க  பிஎஸ்என்எல்  ஓய்வூதியர்  நல சங்கம் . நன்றி.
இப்படிக்கு, தோழமை உணர்வு மற்றும்  வாழ்த்துக்களுடன்  தஞ்சை மாவட்ட  பிஎஸ்என்எல்  ஓய்வூதியர்கள் நல சங்கம் .

No comments:

Post a Comment