Monday 24 December 2018

சேலம் கிழக்கு மாவட்டம் 23-12-2018 அன்று காலை 10-00 மணி அளவில் ஓய்வூதியர் தின விழாவை சிறப்பாக நடத்தி மகிழ்ந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் S . ரங்கன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில செயலாளர் தோழர் R. .வெங்கடாச்சலம் அவர்கள் கலந்து கொண்டார் .தருமபுரி மாவட்ட தலைவர் தோழர் முனியன், பொருளாளர் தோழர் வணங்காமுடி , ஆத்தூர் கிளை செயலர் தோழர் சுப்ரமணியன் , மேட்டூர் கிளை செயலர் தோழர் K.P. ராஜமாணிக்கம் , நாமக்கல் கிளை செயலர் தோழர் C .ராமசாமி, பரமத்தி வேலூர் கிளை செயலர் தோழர் வேணுகோபால் , தமிழ் மாநில உதவி செயலர் தோழர் V .பட்டாபிராமன் , சேலம் கிழக்கு மாவட்ட செயலர் தோழர் P .ராமலிங்கம் ஆகியோர் பேசினார்கள் விழாவின் முத்தாய்ப்பாக தோழர் RV அவர்களின் சுமார் 90 நிமிட பேருரை இருந்தது. அவர் உரை மிக கவனத்துடன் கேட்கப்பட்டது மாவட்ட உதவி செயலர் தோழர் M .குமரேசன் நன்றி உரையுடன் கூட்டம் சுமார் 2-00 மணிக்கு நிறைவு பெற்றது. அனைவருக்கும் வடை பாயாசத்துடன் சேலத்திற்கே உரிய பாரம்பரிய உணவு சூடாக சுவையாக பரிமாறப்பட்டது.
10 குடும்ப ஓய்வூதியர்கள் உட்பட 185 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




No comments:

Post a Comment