Sunday 30 December 2018

மதுரை சங்க வரலாற்றில் இன்று ஒரு புதிய பொன்னேடு உருவாகியுள்ளது. ஆம் மதுரை மாவட்டத்தின் முதல் கிளை சங்கம் வத்தலகுண்டு நகரில் இன்று 30-12-2018 ஞாயிறு காலை 10-00 மணிக்கு உதயமாகியுள்ளது.
தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு மதுரையிலிருந்து தோழர்கள் தர்மராஜன், சுந்தரேசன் . சத்தியசீலன் ,வீராச்சாமி, சூரியன் , திண்டுக்கல் நேசன் , மாநில அமைப்பு செயலர் தேனீ பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
தோழர் எம்.சவுந்தரராஜன்   (DGM - ஒய்வு )அவர்கள் தலைவராகவும் , தோழர் வி. பெரியசாமி ( TT ஒய்வு) அவர்கள் செயலாளராகவும் , தோழர் ஜி .ரெங்கசாமி (STS ஒய்வு ) அவர்கள் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
45 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள வத்தலகுண்டு முதற் கூட்டத்திற்கு 41 உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள் . இது சங்கத்தின் பால் அவர்கள் கொண்டுள்ள வேட்கையை பறைசாற்றியது.
அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த தோழர் ராஜாராம் அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர் . நம் சங்கத்தலைவர் தோழர்கள் முத்தியாலு DGS , அருணாச்சலம் AGS , ராமராவ் தமிழ்மாநில தலைவர், வெங்கடாச்சலம் தமிழ்மாநில செயலர் மற்றும் பலர் வாழ்த்து செய்திகள் அனுப்பி பாராட்டியுள்ளனர்.அனைவருக்கும் நா மணக்கும் இன்சுவை உணவு பரிமாறப்பட்டது.




No comments:

Post a Comment