Friday 28 December 2018


கடலூர் மாவட்ட AIBSNLPWA _வின் சார்பாக 27.12.2018 அன்று ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம் தலைவர். P.ஜெயராமன் தலைமையில் சிறப்பாக நடந்தது .மாநில செயலாளர் தோழர்.R.வெங்கடாச்சலம், தோழர். ஜார்ஜ் கேரள மாநில செயலாளர் மற்றும் சமூக சேவகர்.தோழர்.சிவானந்தன் கொச்சி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தோழர்கள் KVR , KCM ,,மாநில துணை தலைவர்,இளங்கோவன் & NT வாழ்த்துரை வழங்கிட தோழர் ஹாஜா கமலுதீன் நன்றி கூறினார்.மாவட்டம் முழுவதிலும் இருந்து 250 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டது சிறப்பு  நன்றி.
புதுச்சேரியில் பென்சனர் தின விழா .    27.12.2018 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றதுவிழாவினை நடத்திட கான்பிரன்ஸ் ஹாலை  கேட்டோம். வார நாட்களில் தரமுடியாது என மறுத்து விட்டது நிர்வாகம் . ஒரு கதவு சாத்தப்பட்டால், மறுகதவு திறக்கும் என்ற நியதியை மறந்து விட்டார்கள் போலும். மேலும் சீப்பை மறைத்து வைத்து விட்டால், கல்யாணம் நின்று போகும் என்ற மனப்பால் களித்தது நிர்வாகம். அரங்கத்தின்  உள்ளே அனுமதியில்லையா ? வேண்டாம், அரங்கத்தின் உள்ளே பேசுவதை விட , வெளியில் பேசினால் நிர்வாகமும் கேட்கும், மற்றவர்களும்....... கேட்பார்கள் . அதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக எடுத்துக் கொள்கிறோம்


G. M, BSNL, கட்டிட முகப்பில் வீதியில் சாமியானா அமைத்து அரங்கம் போல் அமைத்து, 150 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டு , மதியம் 2 மணி வரை உறுப்பினர்கள் காத்திருந்து மாநிலச் செயலர் திரு. R.வெங்கடாசலம் அவர்களின் நெடிய உரையை உள்வாங்கினர் என்றால் அவர்களின் சங்கப் பற்று எத்தகையது என்பதை நோக்கும் போது IMPOSSIBLE MADE  Possible என்ற செறுக்குடன்  குவிந்தனர். 70 வயது முதல் 78 வயதுள்ள மூத்த உறுப்பினர்களை சால்வை அணிவித்தும் , நினைவுப்பரிசுப் பொருள் அளித்தும் விழா நிகழ்ச்சி அமைந்தது. NFTE, SNEA, AIBSNLEA,,  மாவட்டச் செயலர்கள், தோழர். K. அசோக் ராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில அமைப்புச் செயலர் M.சாம்பசிவம் வாழ்த்துரையில் பாண்டியில் சங்கத்தின் வளர்ச்சியை கண்டு அதை குறைக்க பலப்பல வழிகளில் சூழ்ச்சிகள் நடக்கிறது. மாநிலச் செயலர் எங்கள் பிரச்சனைகளை மாநில நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.




No comments:

Post a Comment