Sunday 1 July 2018

உழைப்பு !  உழைப்பு!!   உழைப்பு !!!
ஓய்வறியா உழைப்பு,
ஓய்வூதியர் நலம் காக்க , துயர் துடைக்க 
நாளும் பயணம் , பொழுதும் அவர்தம் சிந்தனை.
இன்னும் சொல்ல சொல்ல  நா இனிக்கும் நெஞ்சம் நிறையும்.
ஆம் . இத்தனைக்கும் சொந்தக்காரர் நம் தமிழ்மாநில செயலர் தோழர் முத்தியாலுவின் அரும்பணிகளை பாராட்டும் விதமாக அவருக்கு " வாழ்நாள் சாதனையாளர் விருது " அரங்கு நிறைந்த மன்றத்தில் வழங்கி நெல்லை மாவட்ட AIBSNLPWA  சங்கம் பெருமையுற்றது.
கிளைச் செயலராக , மாவட்ட செயலராக , மாநில செயலராக , ஓய்வூதியர் சங்க அகில இந்திய தலைவராக , அகில இந்திய அமைப்புச் செயலராக, மாநில தலைவராக, மாநில செயலராக ஒடி ஒடி உழைத்து , என்றும் ஓய்வூதியர் சிந்தனை , எப்போதும் அவர்களின் மேம்பாடு என்று அணுப்பொழுதும் மாற்று சிந்தனையில்லா ஒரே நோக்குடன் அல்லும் பகலும் தொண்டாற்றி வரும் தோழர் முத்தியாலுவை எவ்வளவுதான் பாராட்டினாலும் தகும் .
அவர் சேவையால் பயனுற்ற நெஞ்சங்கள் வாழ்த்தும் வாழ்த்துக்களே அவரை பல நூறாண்டு வாழ செய்யும்.
வாழ்க அவர் தளர்வறியா சேவை !     வளர்க அவர் தொண்டுள்ளம்!! 




No comments:

Post a Comment