Monday 16 July 2018


14-7- 2018 தஞ்சை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் காலை  பத்து முப்பது மணி அளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் தோழர் ஏகே தனபாலன்  மாவட்ட தலைவர் தலைமை ஏற்க தோழர்V. சாமிநாதன் மாவட்டச் செயலர் வழி  நடத்திட  150 தோழர் தோழியர்கள் கலந்திட கூட்டம் இனிதே நடைபெற்றது.  மாவட்ட செயலர்  இன்றைய கூட்டத்தில் நடக்க இருக்க கூடிய விஷயங்களை சுருக்கமாக எடுத்துரைத்தார்.
பிறகு தோழர் என் வீரபாண்டியன் எம் ஆர் எஸ் பற்றி சில விளக்கங்களையும் மற்றும் சில சந்தேகங்களையும் தனது உரையில் சுருக்கமாக பேசினார் பிறகு தோழர் கே சந்தான கோபாலன் துணைத் தலைவர் தனது உரையில் எம் ஆர் எஸ் பற்றிய தற்போதைய நிலவரங்களையும் சந்தேகங்களுக்கான சுருக்கமான விளக்கங்களையும் அளித்தார் மற்றும்IDA, புதிய பணி நன்கொடை வரவிருக்கின்ற மாநில,  அகில இந்திய மாநாடு பற்றியும் சென்ற மாதம் நடைபெற்ற ஓய்வூதிய அறைகூவல் கூட்டத்தை பற்றியும் வரவிருக்கின்ற
18- 7- 2018 அன்று நடைபெற போகும் தர்ணா போராட்டத்தை பற்றியும் விளக்க உரை ஆற்றினார்
சென்ற மாதம் நெல்லை மாவட்ட மாநாட்டில் 40 ஆண்டு கால தொடர் சமூக பணி சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மாநில செயலர் தோழர் சுவாமிநாதன் அவர்களை வாழ்த்தியும் நெல்லை மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல்ல சங்கத்திற்கு நன்றி கோரி வாழ்த்தினார்கள். இந்த மாத கடைசிக்குள் செலுத்தவேண்டிய income tax பற்றியும் விளக்கமாக கூறி தோழர்கள் அனைவரும் தவறாமல் சங்க சந்தா வினையும் நன்கொடைகளையும் தவறாமல் செலுத்த வேண்டி நினைவுபடுத்தி உரையாற்றினார்கள் .
மற்றுமொரு சிறப்பு அம்சமாக பிஜிஎம் டெலிகாம் சி. vinoth அவர்கள் நமது மாதாந்திர கூட்டத்தில் கலந்துகொண்டு செல்வி பி வர்ஷா என்ற மாணவிக்கு ரூபாய் 30 ஆயிரத்திற்கு ஆன காசோலையை மாணவியின் பிளஸ் ஒன் படிப்பின் செலவிற்கான தொகையாக திரு சாமிநாதன் அவர்கள் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக வழங்கி சிறப்பித்தார்கள். அந்த மாணவி எஸ் எஸ் எல் சி தேர்வில் 500க்கு 473 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். அம்மாணவியின் கல்வி செலவிற்காக வழங்கிய தோழர் சாமிநாதன் அவர்கள் பற்றியும் பிஎஸ்என்எல் தஞ்சை ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் சமூக சேவையினையும் பாராட்டி மேலும் நமது மன நலம் குன்றியோர் காப்பகத்திற்கு செய்த சேவைகளையும் சிலாகித்து உரையாற்றினார்கள்
மாவட்டச் செயலர் தனது முடிவுரையில் எம் ஆர் எஸ் பற்றிய விளக்க உரையும் வருகின்ற தர்ணா போராட்டத்தை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து அனைவரும் தவறாமல் கலந்து கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். தோழர் எம் .கணேசன் அவர்கள் நன்றி நவில இனிய மதிய விருந்துடன் விழா இனிதே நிறைவேறியது
இப்படிக்கு
கே சந்தான கோபாலன்
துணைத் தலைவர் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம்
தஞ்சை

No comments:

Post a Comment