Thursday 26 July 2018


இன்று  26 7 2018 வியாழக்கிழமை தஞ்சை பிஎஸ்என்எல் சேவை அனைத்து சங்க ஒன்றிணைந்த  போராட்ட கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் மாவட்டம் முழுவதும் இருந்து வந்து ஒருங்கிணைந்து பங்குபெற்று அருமையானதொரு நிகழ்வினை  ஏற்படுத்தினார்கள் .இன்றைய கடைசி நாள் போராட்டக் களத்திற்கு நமது பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம் தஞ்சை மாவட்டத்தின் சார்பாக 50க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்திருந்து பங்குபெற்று சிறப்பித்தார்கள். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் நமது மாவட்ட  செயலர் தோழர் வி சாமிநாதன் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு நமது ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் ஆதரவினையும் இதன் மூலம் பறைசாற்றினார்.

நமது தஞ்சை மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் சார்பாக ஒரு சிறப்பான சிறந்த கருத்துக்களையும் தனது உரையில் தொகுத்து வழங்கினார்.

வாழ்க பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம். வளர்க அனைத்து பிஎஸ்என்எல் சேவை சங்கங்களின் ஒற்றுமை.
In Kumbakonam CRDA SSA, more than 15 of our AIBSNLPWA association comrades participated in the last day of the 3 days relay hunger fast protest.


No comments:

Post a Comment