Sunday 17 December 2023

இன்று 17- 12- 2023 ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய  BSNL ஓய்வூதியர்கள் நல சங்கத்தின்ஓய்வு ஊதியர்கள் தின விழாவும்”  “மாதாந்திர பொதுக்கூட்டமும்”  காலை  பத்து முப்பது மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒன்றரை மணி வரை நிகழ்வுகள் நடைபெற்றது.  சங்கக் கொடியினை மூத்த தோழர் P. ருத்திராபதி OS ( ஓய்வு ) அவர்கள் அங்கத்தினரின் வாழ்த்து மற்றும் வீர வணக்க கோஷங்களுடன் ஏற்றி வைத்தார்.  ஓய்வூதியர் தின மற்றும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் செயல் தலைவர் தோழர் எம்  இருதயராஜ் தலைமை ஏற்க மாவட்ட செயலாளர் தோழர் அய்யனார் கூட்டத்தினை சிறப்புற நடத்தினார்.

சென்ற கூட்டத்திலிருந்து இந்த கூட்டம் வரை உயிர் நீத்த அனைவரது ஆன்மாவிற்கும் அஞ்சலி செலுத்தும் முகத்தான் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மாதம் மணிவிழா அமையப்பெற்ற தம்பதியர் மற்றும் சென்ற மாதம் மற்றும் இந்த மாதம் பிறந்த நாள் அமையப்பெற்ற தோழர் தோழியரின் பிறந்தநாள் விழா உறுப்பினர்களின் வாழ்த்து கோஷங்களின் இடையே கேக் வெட்டப்பட்டு சந்தன மாலை அணிவிக்கப்பட்டு வெகு விமர்சையாக வழக்கம் போல் நடைபெற்றது.

இன்றைய சிறப்பு அழைப்பாளர் மாநில சங்கத்தின் தலைவர் தோழர் வீ. சாமிநாதன் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவர் தனது சிறப்பு உரையில் ஓய்வு ஊதியர்கள் தின விழாவின் ஆரம்ப முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா நிகழ்வுகளையும் விளக்கமாக விவரமாக தனது உரையில் பதிவிட்டார். அடுத்து மாவட்ட செயலர் தனது நிறைவு உரையில் தஞ்சை மாவட்ட பிரச்சனைகளையும் அதன் காரண காரியங்களையும் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பது பற்றியும் இனி நடைபெற இருக்கும் எல்லா கூட்டத்திற்கும் அனைவரும் வந்து ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டி உரையை நிறைவு செய்தார். தோழர் கே. சீனு பொருளாளர் நன்றி நவில மதிய தஞ்சை இன் சுவை மதிய விருந்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

K.சந்தான கோபாலன்,
முதன்மை ஆலோசகர்,
தஞ்சாவூர்










No comments:

Post a Comment