Sunday 10 October 2021

 

AIBSNLPWA கடலுார் மாவட்ட செயற்குழு கூட்டம் 09.10.2021 காலை கடலுார் G.R. ஹோட்டல் வளாகத்தில் தலைவர்.P.ஜெயராமன் தலைமையில் சிறப்புடன் நடந்தது.
தோழர்.A.ஜெயகுமார் (உதவி செயலர்) அஞ்சலி உரையை
நிகழ்த்திட, செயலர்.R.அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைவர்.P.ஜெயராமன் மாவட்ட சங்கம் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆற்றி வரும் பணிகள்,CGHS மாற்றலுக்கு எல்லா உதவிகளையும் செய்வது பற்றியும் CGHS க்கு பணம் செலுத்தியவர்களுக்கு அவர்கள் கட்டிய தொகையை திரும்ப பெற்றுக் கொடுக்கும் உதவிகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் செயலர்.R.அசோகன் மாவட்ட சங்க செயல்பாட்டு அறிக்கையை வாசிக்க, செயற்குழு முழுமையாக அதை ஏற்றுக்கொண்டது. பின்னர் அமைப்பு நிலை விவாதம்மாவட்ட சங்க மாநாட்டினை சிதம்பரம் பகுதி தோழர்கள் விரும்பியபடி மாநில செயலரிடம் கலந்து பேசிய பிறகு முடிவு எடுத்திட தீர்மானிக்கப்பட்டது.  CORONA காரணமாக தடைப்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை உடனே துவக்கிடவும் முடிவு செய்யப்பட்டது. மாநில துணை தலைவர்.தோழர்K.சந்திரமோகன் சிறப்புரை ஆற்றினார்.
இறுதியாக ஹாஜா கமாலுதின் நன்றி கூறினார்.
 
பிற்பகலில் நடந்த கடலூர் பகுதி மாதாந்திர கூட்டத்தில்
80 வயதை கடந்த ஏழு தோழர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பகுதி தலைவர். P.சாந்தகுமார் தலைமை ஏற்று  நடத்திட செயலர் G.அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
80 வயது கடந்த தோழர்கள். 1)N.S லட்சுமி, 2) அசீமா கானம், 3) செங்களனி, 4)ஜோவெற்றி, 5) P. கண்ணன்,
6) பாலசுப்ரமணியன் & 7) திருசங்கு ஆகியோர் சால்வை அணிவித்து, இராஜ கிரீடம் அணிவிக்கப்பட்டு ,வாழ்த்து மடலும் அவர்களுக்கு, தலைவர்கள் சாந்தகுமார், P.ஜெயராமன் வழங்கினர். தோழர்கள்.N.திருஞானம்,K.இளங்கோவன்,K.வெங்கட்ரமணன், A.ஜெயகுமார், ஜெகந்நாதன், ராஜலிங்கம், செல்வரசு மேரி, ராஜகுமாரி , மாவட்ட செயலர்.R.அசோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியாக பொருளர் .N.செல்வராசு நன்றியுரை நிகழ்த்தினார். 
கூட்டத்தில் தோழியர்கள் 15 பேர் உள்ளிட்ட 100 தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment