Saturday 21 August 2021

 

தஞ்சாவூர்

அன்பு தோழர்களே தோழியர்களே அனைவருக்கும் காலை வணக்கம். இன்று 20-08-2021 அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் பன்னிரண்டாவதுஅமைப்பு தின விழா தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. காலை பத்து முப்பது மணிக்கு விழா ஆரம்பமாகியது. சங்க கொடியினை மூத்த தோழர் எம் கலியன் அவர்கள் ஏற்றிவைக்க கூடியிருந்த அனைத்து தோழர்களின் வாழ்த்து கோஷங்கள் மற்றும் வெற்றி வணக்கத்துடன் விழா இனிதே ஆரம்பமாகியது.

பிறகு கூட்டம் மீட்டிங் ஹாலிலே தோழர் எம் ராஜேந்திரன் மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட செயலர் வி சாமிநாதன் மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் மற்றும் மூத்த தோழர் தொழிற்சங்க தலைவர் கே எஸ் கே அவர்களின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக தோழியர் சாரதா சந்தான கோபாலன் கடவுள் வாழ்த்து பாடிட மாவட்ட தலைவர் மதுரை ராஜேந்திரன் தலைவர் தலைமை உரையாற்றினார். அடுத்து மாவட்ட செயலர் வி சாமிநாதன் சிறப்புரையாற்றினார். தோழர்கள் M. இருதயராஜ் கே. சந்தானகோபாலன் என். நடராஜன் தோழியர் மல்லிகா சுகுமாரன் ஆகியோர் விழாவில் சங்க நிகழ்வுகள், ஆரம்ப காலம் முதல் இன்றைய நாள் வரை வளர்ந்த விதம் ஆற்றிய சாதனைகள் பெருமைகள் இனி ஆற்றவேண்டிய செயல்பாடுகள் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார்கள்.

தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்பு செயலர் சிறப்பு வாழ்த்து உரை ஆற்றினார்.  தோழர் DG  அவர்களின் ஆடியோ உரையும் தோழர் K. முத்தியாலு அவர்களின் ஆடியோ உரையும் ஒலி பரப்பப்பட்டது.  தோழர் தட்சிணாமூர்த்தி நன்றி உரைக்குபின்  ஒரு மணிக்கு விழா முடிந்தது.

இந்த கொரோனா காலத்திலும் 25-க்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் காட்சியாக அமைந்தது. கூட்டத்தின் இடையே சிற்றிடை உணவு (Snacks ) மற்றும் தேனீர் வழங்கப்பட்டு உறுப்பினர்கள் கௌரவிக்கப் பட்டார்கள்.

வாழ்க ஓய்வூதியர் ஒற்றுமை !      வளர்க நம்  AIBSNLPWA
தோழமை வாழ்த்துக்களுடன்
V. சாமிநாதன்,
மாவட்ட செயலாளர்,
AIBSNLPWA, 
தஞ்சாவூர்.


 கடலூர் மாவட்டம் 
AIBSNLPWA கடலுார் மாவட்ட சங்கம்.
இன்று  20.08.2021 காலை விழுப்புரம் பகுதியில் நம் நல சங்கத்தின் அமைப்பு தின விழா தலைவர். தோழர். வேதாசலம் தலைமையேற்க,
செயலர்.கணேசன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.
நம் நல சங்கம் தொடங்கி 12 ஆண்டுகள் கடந்து 13 ஆவது அமைப்பு தின
விழா நாடு முழுவதும் உள்ள நம் தோழர்கள் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இன்றைய விழுப்புரம் அமைப்பு தின கூட்டத்தில்
தோழர்கள்D.சண்முகசுந்தரம்ஜோ .வெற்றிமீசை ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார்கள்மாவட்ட சங்க உதவி தலைவர்.N.T, மற்றும் மாவட்டத்தலைவர். P.ஜெயராமன் ஆகியோர் சங்க தொடக்க வரலாறு , இன்றைய தேதி வரை நம் சங்கம் ஆற்றி வரும் அரும் பெரும் பணிகள் பற்றியும் இந்த சாதனைகள் வெற்றி பெறுவதற்கு அனுதினமும் பாடுபட்டு வரும் அருமை தலைவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்து உரை நிகழ்த்தினார்கள்.
இன்றைய கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு நம் அகில இந்திய சங்க துணை தலைவர். தோழர்.D.G அவர்களின் ஆடியோ உரை அனைத்து தோழர்களும் கேட்டு பயனுறும் வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டதுவிழா நிறைவாக  தோழர்.தக்ஷிணாமூர்த்தி நன்றி கூறிட விழா  இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment