Sunday 29 August 2021

 

தோழர்களே!
26-08-2021 அன்று நடைபெற்ற நமது பொதுக்குழுவில்
34 தோழர்கள் கலந்து கொண்டனர். பொதுகுழுவை கிளைத் தலைவர் தோழர். SVC குரு தலைமை ஏற்று நடத்த, கிளைச் செயலாளர் தோழர் RG ரங்கன் அனைவரையும் வரவேற்றார்.  இடைப்பட்ட காலங்களில் மறைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியப்பின், தலைவர் தமது
உரையில் நமது கிளையின் செயல்பாடுகளை தெளிவுப் படுத்தினார். சிறப்புரையாக  நமது மாவட்ட செயலாளர் தோழர் C துரைசாமி பேசுகையில்,  இன்றைய நிகழ்வுகலான Medical allowance, CGHS, MRS card, இன்னும் மற்ற பிரச்சனைகள் சம்மந்தமாக சிறப்புரையாற்றினார். ஆய்படு பொருள் மீது  விவாதம் நடந்தது, நிதி அறிக்கையை கிளைப் பொருளர் தோழர் காளிமுத்துசாமி சமர்ப்பிக்க, பொதுக்குழு ஏற்று கொண்டது. உதகை AIBSNLPWA கிளை தோழரும் NFTE BSNL தலைவருமான தோழர் K பாலசுப்பிரமணி  மற்றும் BSNLEU  மாவட்ட செயலர் தோழர் மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர், தோழர் KV கணேஷ் அவர்கள் கிளையின் செயல்பாடுகளை வாழ்த்தி பேசியதோடு, ஓய்வூதியர்  நலன் கருதி Finger Print Machine வாங்குவதற்கு ரூபாய் 2000/. நன்கொடை வழங்கினார் நாம் நன்றியோடு பெற்றுக் கொண்டோம். இறுதியில் தோழர் RG ரங்கன் பொதுக்குழுவில் கலந்துகொண்ட  அனைவருக்கும் நன்றி கூறினார்.  பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.இந்த பொதுக்குழு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு  நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது AIBSNLPWA குன்னூர் கிளையின் மனமார்ந்த நன்றிகள்!

No comments:

Post a Comment