Tuesday 28 April 2020

பி.எஸ்.என்.எல்., நிவாரண நிதி
 Added : ஏப் 27, 2020  23:47
சென்னை:கொரோனா நிவாரண நிதியாக, பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் நலச் சங்கம் சார்பில், 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் மாநில தலைவர், ராமாராவ் கூறியதாவது:அகில இந்திய அளவில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச் சங்கம், ஒரு லட்சம் உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. சங்கத்தின் சார்பில், தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.கொரோனா நிவாரண நிதியாக, பல மாநிலங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது; தமிழக முதல்வரிடம், 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு

No comments:

Post a Comment