Friday 25 October 2019


தஞ்சை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தினர் தீபாவளி கொண்டாட்ட செய்திகள்.
அன்பு தோழர்களே, தோழியர்களே, அனைவருக்கும் காலை வணக்கம். நமது சங்கமும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் அமைப்பும் சேர்ந்து சென்ற 22 ,23, 24 10 2019ஆகிய மூன்று தினங்கள் தஞ்சை சேவாலயா முதியோர் இல்லம் தஞ்சை மனநலம் குன்றியோர் காப்பகம் ஆன அன்பாலயம் மற்றும் ஓசானம் முதியோர் காப்பகம் சென்று அங்குள்ள அங்கத்தினர் உடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தோம். திரு வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் உடன் நமது சங்க நிர்வாகிகளும் ஆர்வம் மிகு தோழர்களும் தோழியர்களும் மேற்கண்ட இடங்களுக்கு சென்று கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளி புதிய ஆடைகள் பட்டாசுகள் இனிப்பு கார வகைகள் அனைத்தையும் அளித்து அங்குள்ள நண்பர்களுடன் ஒட்டி உறவாடி அளவளாவி இனிய விதமாக தீபாவளி பண்டிகை கொண்டாடி வந்தோம்.
அன்பாளையத்தில் அமையப்பெற்ற நிகழ்வுகள் மனதை மிகவும் கவர்ந்ததாக அமைந்தது ஏனெனில் அங்குள்ள மனநல மற்றோரின் குழந்தைத்தனமான செய்கைகளும் அவர்களது மன மகிழ்ச்சி காட்சிகளையும் காண்பது பெரும் பாக்கியமாக அமையப்பெற்ற தோடு அல்லாமல் வாழ்நாள் முழுதும் நினைத்து நினைத்து மகிழக்கூடிய அம்சமாக மனதில் ஆழ பதிந்தது.
அதுபோல ஓசானம் முதியோர் காப்பகம் சேவாலயா முதியோர் காப்பகம் நிகழ்வுகள் அங்குள்ள முதியோர் உடன் கொண்டாடிய விழா நிகழ்வுகளும் அவர்களது ஆசைகளும் நமக்கு அவர்கள் அளித்த அருள் ஆசிகளும் நித்தம் நித்தம் நினைந்து மகிழும் படியான காட்சிகளாக அமைந்தது. இதுபோன்ற நிகழ்வுகள் சென்ற 20 ஆண்டு காலமாக நடைபெற்று வருவதோடு அல்லாமல் வரும் காலங்களிலும் நன்கு நிகழ்வுகள் அமைந்திடவும் நடை பெற்றிடவும் இறைவனின் அருளை பெற வேண்டி விரும்பி பிரார்த்தனை செய்கிறோம்.
நன்றி, வணக்கம்.
வாழ்க, வளர்க, அகிலஇந்திய பிஎஸ்என்எல் ஓய்வுதியம் நல சங்கம், தஞ்சை மாவட்டம்.


No comments:

Post a Comment