Saturday 12 October 2019


இன்று 12 10 2019 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை மாவட்ட ஏ ஐ பி எஸ் என் எல் நல சங்கத்தின் மாதாந்திர பொதுக்கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை சரியாக பத்து முப்பது மணிக்கு தொடங்கிற்று. தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் தோழர் ஏகே தனபாலன் கௌரவத் தலைவர் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் முன்னிலையில் தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று நடத்தினார். முதலில் தோழியர் தங்கம் சேவியர் கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் என் நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.125க்கும்மேற்பட்ட தோழர்கள், தோழியர்களும் கலந்து கொள்ள முதல் நிகழ்வாக மறைந்த அண்மையில் 80 வயது நிறைவு பெற்று விழா கொண்டாடிய தோழர் வி. நடராஜன் துணை கோட்ட பொறியாளர் மன்னார்குடி அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் தோழர்கள் பிரின்ஸ், பிரான்சிஸ் சேவியர், கைலாசம் ,என் பி2, மோகனசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். பொதுவாக நமது ஓய்வூதிய மாற்றம் குறித்து கருத்துக்களை பதிவு செய்தனர். வழக்கம்போல் சென்ற மாதம் பணி ஓய்வு பெற்ற இரண்டு தோழர்களின் மணி விழாவும் இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற தோழர் தோழியர்கள் பிறந்தநாள் விழாவும் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் வாழ்த்து கோஷங்களுடன் இனிதாக கொண்டாடப்பட்டது. நிறைவாக தோழர் டி. கணேசன் நன்றி கூற மதிய தஞ்சை பாரம்பரிய இன்சுவை விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
வாழ்க வளர்க ஓய்வூதியர் நல சங்கம்.
தஞ்சை மாவட்டம். நன்றி .வணக்கம்.

No comments:

Post a Comment