Monday 21 October 2019


19 10 2019 சனிக்கிழமை தஞ்சை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் மற்றும் தஞ்சை பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் இணைந்து இரண்டாவது முறையாக தீபாவளி பண்டிகையினை தஞ்சை அன்னை சத்யா பள்ளி, கில்ட் ஆஃப் சர்வீசஸ் ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் பள்ளி, இந்தியன் ரெட் க்ராஸ் மாணவர்கள் காப்பகம் ஆகியவற்றுக்குச் சென்று சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அங்கு உள்ள சிறுவர் சிறுமிகள் மாணவர்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளிக்கான உடைகள் இனிப்பு கார பலகாரங்கள் மற்றும் பட்டாசுகள் கொடுத்து அங்குள்ள நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள குழந்தைகள் மாணவ மாணவிகள் உடன் அளவளாவி சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் கிட்டதட்ட சென்ற 20 வருடங்களாக தங்குதடையின்றி அனைத்து நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் உறுப்பினர்கள் அனைவரது ஒத்துழைப்புடனும் ஆதரவு உடன் நல்ல முறையிலே நடந்து வருகிறது. இன்னும் வரும் காலங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற அனைவரது ஒத்துழைப்பையும் ஆதரவினையும் அளிக்க வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு இந்த தீபாவளி பண்டிகை அனைவருக்கும் இனிதாய் அமைய இறைவனிடம் பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இன்றைய நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் வீ. சாமிநாதன் தலைமையில் ஆர்வமிக்க முன்னணி தோழர்களும் தோழியர்களும் ஆர்வமாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தியதற்காக நன்றிகளை இதயபூர்வமாக செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள்அமைப்பு கூட்டாக ஒன்றிணைந்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி நன்றி நன்றி.



No comments:

Post a Comment