Sunday 9 June 2019

புதுச்சேரி மாதாந்திரக் கூட்டம் இன்று 08.06.19 நடந்தது. தலைவர் K .R . சிவகுமார் தலைமை தாங்கினார் . 75 பேர் கலந்து கொண்டனர். மறைந்த தோழர்.S.P - சங்கரலிங்கம், SDE (Rtd ) ,சென்னை -அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த மாத செயல்பாடாக,   21.5 .19 அன்று பென்சனர் குறைதீர்வுக்குழு கூட்டம் நடந்தது, அதில் ID கார்டு ,MRS கார்டு வழங்கப்பட்டது பற்றியும், மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில் சென்னைக்கு அனுப்பப்பட்டது எத்தனை, பட்டுவாடா ஆனது எத்தனை, நிலுவையில் உள்ளது எவ்வளவு என்பதை ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை AO (Dwl)-யிடம் தெரிந்து கொள்ளலாம் என்றும், மெடிக்கல் பில்லில் நீக்கப்பட்ட தொகை எவ்வளவு, பட்டுவாடா செய்யப்பட்ட தொகை விபரங்களை ஓய்வூதியர்க்கும் தெரி விக்கவேண்டும்,    IT பிடித்தம் செய்ததை, IT அலுவலகத்திற்கு செலுத்தாததினால் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட பென்சனர் ஆடிட்டருக்கு நிறைய பணம் தந்து தீர்க்கவுள்ளதை நிர்வாகத்திடம் சொல்லி ஆவண செய்ய வலியுறுத்தினோம்.
   நமது சங்க கூட்ட ஆரம்பத்தில் மே-2019 முடிய ஆயுள் சந்தா உறுப்பினர் எண்ணிக்கை 300 - தாண்டி சாதனை படைத்ததை செயலர் கூறிய போது அவை கை தட்டி ஆரவாரம் செய்தது.  2 நாள் சுற்றுலா பற்றி தலைவர் விவரித்தார். அமைப்பு நிலை பற்றி மாநில அமைப்புச் செயலர். M. சாம்பசிவம், சுப்பையா, M - V.ராமகிருஷ்ணன், N. பட்டாபி. M. கிருஷ்ணசாமி, S_சதாசிவம், M.செல்வரங்கம் ஆகியோர் பேசினர்.பொருளாளர் R-லோகநாதன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment