Wednesday 9 January 2019


வேலூரில் 07-01-2019 அன்று நம் AIBSNLPWA சங்கத்தின் சார்பில் ஒரு சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் தோழர்கள் K. முத்தியாலு அகில இந்திய துணை பொதுசெயலாளர் அவர்கள் , R .வெங்கடாசலம் தமிழ் மாநில செயலாளர் அவர்கள் , M .கண்ணப்பன் சென்னை தொலைபேசி மாநில பொருளாளர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற் பொழிவாற்றினார்கள் .
மாலை 3-00 மணிக்கு துவங்கிய கூட்டம் 6-00 மணி வரை நீண்டது. கூட்டத்திற்கு வந்திருந்த  200 உறுப்பினர்கள் (21 மகளிர் உட்பட) மிக உன்னிப்பாக கவனித்து அனைவரின் கருத்துரைகளை கேட்டு பயன் பெற்றனர்.
வேலூர் மாவட்டத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 500 ஐத்தாண்டி  இன்று 518 ஐ எட்டியிருக்கிறது. எல்லோருமே ஆயுட்கால உறுப்பினர்கள்  இம்மாதம் 4 உறுப்பினர்கள் புதிதாக நம் சங்கத்தில் இணைந்துள்ளார்கள் எனும் மகிழ்ச்சி தரும் செய்தியினை மாவட்ட செயலர் தோழர் முருகன் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார்.
வாழ்க ஓய்வூதியர் ஒற்றுமை.  வளர்க   AIBSNLPWA 
தோழமை வாழ்த்துக்களுடன் 
முருகன் 
மாவட்ட செயலர்,
வேலூர்



No comments:

Post a Comment